ETV Bharat / state

'அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே இறைச்சிகள் வெட்டப்பட  வேண்டும்' - அரசால் அங்கீகரிக்கப்பட்ட , உரிமம் பெற்ற இறைச்சிக் கடைக்களில் மட்டுமே இறைச்சிகள் வெட்டலாம்

சென்னை: அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற இறைச்சிக் கடைகளில் மட்டுமே மத நிகழ்வுக்காகவும், வழிபாட்டிற்காகவும் இறைச்சிகள் வெட்டப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ceh
ceh
author img

By

Published : Aug 1, 2020, 4:07 AM IST

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற இறைச்சிக் கடைகளில் மட்டுமே மத நிகழ்வுக்காகவும், வழிபாட்டிற்காகவும் இறைச்சிகள் வெட்டப்பட வேண்டும்.

அரசால் அங்கீகரிக்கப்படாத இடங்களில் விலங்குகள் வெட்டப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது நாளை நடைபெறவுள்ள பக்ரீத் பண்டிகைக்கும் பொருந்தும். எனவே, உயர் நீதிமன்ற உத்தரவின்படி வியாபாரிகளும் பொதுமக்களும் இறைச்சிக் கூடங்களைத் தவிர்த்து பிற இடங்களில் இறைச்சிகள் வெட்டக் கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற இறைச்சிக் கடைகளில் மட்டுமே மத நிகழ்வுக்காகவும், வழிபாட்டிற்காகவும் இறைச்சிகள் வெட்டப்பட வேண்டும்.

அரசால் அங்கீகரிக்கப்படாத இடங்களில் விலங்குகள் வெட்டப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது நாளை நடைபெறவுள்ள பக்ரீத் பண்டிகைக்கும் பொருந்தும். எனவே, உயர் நீதிமன்ற உத்தரவின்படி வியாபாரிகளும் பொதுமக்களும் இறைச்சிக் கூடங்களைத் தவிர்த்து பிற இடங்களில் இறைச்சிகள் வெட்டக் கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.