ETV Bharat / state

பலே கொள்ளையன் முருகன் - ட்ரான்சிட் வாரன்டில் தமிழ்நாடு கொண்டுவர முயற்சி!

author img

By

Published : Oct 13, 2019, 1:42 PM IST

சென்னை: லலிதா ஜூவல்லரி பலே கொள்ளையர் முருகன் சென்னையில் பலகோடிகள் மதிப்பில் வீடுகளில் கொள்ளையடித்தது தொடர்பாக விசாரிக்க ட்ரான்சிட் வாரன்டில், அவரை கொண்டுவர சென்னை காவல்துறை முயற்சி செய்து வருகிறது.

murugan

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் அக்டோபர் 2ஆம் தேதி அன்று மர்மமான முறையில் சுவற்றை துளையிட்டு நகைகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட மணிகண்டன் மற்றும் சுரேஷின் தாயார் ஆகிய இருவரையும் ஏற்கனவே கைது செய்து, காவல்துறையினர் திருச்சி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஒன்பது தனிப்படை அமைத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் பிறகு சுரேஷ் திருச்சி சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்தக்கொள்ளை சம்பவத்தில் காட்ஃபாதராக விளங்கிய முருகன் இரு தினங்களுக்கு முன்பு பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். முருகன் சரணடைந்த நிலையில் அவரை 6 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முக்கியக்குற்றவாளியான முருகன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் திருச்சி மாநகர காவல்துறையினர் விசாரணைக்கு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி குற்றவாளி முருகன் 2018ஆம் ஆண்டு சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள 19 வீடுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை போனது தொடர்பாக நீதிமன்றக் காவலில் முருகனை எடுத்து விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முருகன் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு நீதிமன்றத்தில் இருப்பதால், அவரை டிரான்சிட் மூலமாக எடுத்து வரப்போவதாக அண்ணாநகர் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால், டிரான்சிட் வாரன்ட் சென்னை காவல்துறைக்கு கொடுக்கப்படுமா அல்லது திருச்சி காவல்துறைக்கு கொடுக்கப்படுமா என்பது பெங்களூரு நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க:

லலிதா ஜுவல்லரியில் கொள்ளை: 12 கிலோகிராம் தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல்!

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் அக்டோபர் 2ஆம் தேதி அன்று மர்மமான முறையில் சுவற்றை துளையிட்டு நகைகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட மணிகண்டன் மற்றும் சுரேஷின் தாயார் ஆகிய இருவரையும் ஏற்கனவே கைது செய்து, காவல்துறையினர் திருச்சி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஒன்பது தனிப்படை அமைத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் பிறகு சுரேஷ் திருச்சி சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்தக்கொள்ளை சம்பவத்தில் காட்ஃபாதராக விளங்கிய முருகன் இரு தினங்களுக்கு முன்பு பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். முருகன் சரணடைந்த நிலையில் அவரை 6 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முக்கியக்குற்றவாளியான முருகன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் திருச்சி மாநகர காவல்துறையினர் விசாரணைக்கு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி குற்றவாளி முருகன் 2018ஆம் ஆண்டு சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள 19 வீடுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை போனது தொடர்பாக நீதிமன்றக் காவலில் முருகனை எடுத்து விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முருகன் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு நீதிமன்றத்தில் இருப்பதால், அவரை டிரான்சிட் மூலமாக எடுத்து வரப்போவதாக அண்ணாநகர் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால், டிரான்சிட் வாரன்ட் சென்னை காவல்துறைக்கு கொடுக்கப்படுமா அல்லது திருச்சி காவல்துறைக்கு கொடுக்கப்படுமா என்பது பெங்களூரு நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க:

லலிதா ஜுவல்லரியில் கொள்ளை: 12 கிலோகிராம் தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல்!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 13.10.19

லலிதா ஜூவல்லரி பலே கொள்ளையன் முருகனுக்கு சென்னையில் பலகோடிகள் மதிப்பில் வீடுகள், ட்ராசிட் வாரண்டில் முருகனை கொண்டுவர சென்னை காவல்துறை முயற்சி...

இரண்டு வாரத்துக்கு முன்பு திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி சுவற்றில் துளையிட்டு கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கொள்ளை வழக்கு சம்பவமாக ஏற்கனவே மணிகண்டன் மற்றும் சுரேஷின் தாயார் இருவரையும் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஒன்பது தனிப்படை அமைத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் பிறகு சுரேஷ் திருச்சி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்றைய முந்தைய தினம் முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். முருகனை 6 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய குற்றவாளியான முருகன் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரையும் திருச்சி மாநகர போலீசார் விசாரணைக்கு எடுக்க உள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தகவல் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது வந்த தகவலின் படி முருகன் என்பவன் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை அண்ணாநகர் பகுதியில் தொடர்ந்து 19 வீடுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை பணம் கொள்ளை போனது தொடர்பாக நீதிமன்ற காவலில் முருகனை எடுத்து விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முருகன் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு நீதிமன்றத்தில் இருப்பதால் அவரை டிரான்சிட் மூலமாக எடுத்து வரப்போவதாக அண்ணாநகர் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் டிரன்சிட் வாரண்ட் சென்னை போலீசாருக்கு கொடுக்கப்படுமா அல்லது திருச்சி போலீசாருக்கு கொடுக்கப்படுமா என்பது பெங்களூர் நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது..

tn_che_01_chennai_cops_tried_to_bring_master_mind_smuggler_murugan_Banglore_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.