ETV Bharat / state

தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டி பணம் பறித்தவர் கைது!

author img

By

Published : Jun 22, 2019, 7:02 PM IST

சென்னை: அமைந்தகரையில் தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டி பணம் பறித்து வந்த நந்தகுமார் என்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

CHEATING

சென்னை மைலாப்பூரைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி (57), அமைந்தகரை மேத்தா நகரில் பல்பொருள் நிறுவனம் நடத்திவருகிறார். இவரிடம் அச்சக தொழிலாளர் நலச்சங்கம் என்ற சங்கத்தை ஏற்படுத்தி, அதன் தலைவராக இருந்துவரும் சென்னை சூளைமேடு அப்துல்லா தெருவைச் சேர்ந்த நந்தகுமார் (52) என்பவர் தொழிலாளர்களை துன்புறுத்தி வருவதாகக் கூறி அஷ்ரப் அலியிடம் ரூ.50,000 பணத்தை மிரட்டி வாங்கி உள்ளார்.

ஊழியர்களை மிரட்டி பணம் பறித்த நபர் கைது
இது குறித்து அஷ்ரப் அலி அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நந்தகுமாரை கைது செய்து விசாரணை செய்ததில், மிரட்டி பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டார்.

மேலும், பல தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் சென்று உங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை கொடுமைப்படுத்தியுள்ளதாகக் கூறி, அதனால் தங்கள் மீது வழக்கு தொடுக்கப்போவதாக மிரட்டி லட்சக்கணக்கில் நந்தகோபால் பணம் வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், 2014ஆம் ஆண்டு நந்தகுமார் மீது அம்பத்தூர் காவல் நிலையத்தில் இதே போல் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மைலாப்பூரைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி (57), அமைந்தகரை மேத்தா நகரில் பல்பொருள் நிறுவனம் நடத்திவருகிறார். இவரிடம் அச்சக தொழிலாளர் நலச்சங்கம் என்ற சங்கத்தை ஏற்படுத்தி, அதன் தலைவராக இருந்துவரும் சென்னை சூளைமேடு அப்துல்லா தெருவைச் சேர்ந்த நந்தகுமார் (52) என்பவர் தொழிலாளர்களை துன்புறுத்தி வருவதாகக் கூறி அஷ்ரப் அலியிடம் ரூ.50,000 பணத்தை மிரட்டி வாங்கி உள்ளார்.

ஊழியர்களை மிரட்டி பணம் பறித்த நபர் கைது
இது குறித்து அஷ்ரப் அலி அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நந்தகுமாரை கைது செய்து விசாரணை செய்ததில், மிரட்டி பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டார்.

மேலும், பல தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் சென்று உங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை கொடுமைப்படுத்தியுள்ளதாகக் கூறி, அதனால் தங்கள் மீது வழக்கு தொடுக்கப்போவதாக மிரட்டி லட்சக்கணக்கில் நந்தகோபால் பணம் வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், 2014ஆம் ஆண்டு நந்தகுமார் மீது அம்பத்தூர் காவல் நிலையத்தில் இதே போல் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:சென்னை அமைந்தகரையில் தனியார் நிறுவன உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்தவர் கைது.*


சென்னை மைலாப்பூரை சேர்ந்தவர் அஷ்ரப் அலி (57). இவர் அமைந்தகரை மேத்தா நகரில் பல்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரிடம் அச்சக தொழிலாளர் நலசங்கம் என்ற சங்கத்தை ஏற்படுத்தி அதன் தலைவராக இருந்துவரும் சென்னை சூளைமேடு அப்துல்லா தெருவை சேர்ந்த நந்தகுமார் (52) என்பவர் தொழிலாளர்களை துன்புறுத்தி வருவதாக கூறி அஷ்ரப் அலியை மிரட்டி 50,000 பணம் வாங்கி உள்ளார்.

இது குறித்து அஷ்ரப் அலி அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த அமைந்தகரை போலீசார் நந்தகுமாரை கைது செய்து விசாரணை செய்ததில், மிரட்டி பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். மேலும், பல தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் சென்று"உங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை கொடுமைபடுத்தியுள்ளீர்கள். அதனால் உங்கள் மீது வழக்கு தொடுக்க போகிறேன்" என்று மிரட்டி லட்ச கணக்கில் நந்தகோபால் பணம் வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


மேலும், 2014 ம் ஆண்டு நந்தகுமார் மீது அம்பத்தூர் காவல் நிலையத்தில் இதே போல் இரண்டு வழக்கு பதிவு செய்து சிறைக்கு சென்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கடையின் மேலாளர் அருள்பிரகாஷ் பேசுகையில்

நந்தகுமார் என்ற நபர் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் என்று அறிமுகமாகி,கம்பெனியில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு ஊதியம் முறைப்படி வழங்கவில்லை என கம்பெனி மீது புகார் அளித்து விடுவதாக மிரட்டி 50ஆயிரம் ரூபாய் வரை பறித்து உள்ளதாக குற்றம் சாட்டினார்..மேலும் இதை பற்றி புகார் அளித்ததும் அமைந்தகரை போலிசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து நந்தகுமாரை கைது செய்த காவல்துறைக்கு நன்றியைத் தெரிவித்தார்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.