ETV Bharat / state

குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்!

author img

By

Published : Jan 14, 2020, 3:49 PM IST

Updated : Jan 14, 2020, 6:19 PM IST

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து குழந்தையைக் கடத்திய நபர், தான் பிச்சை எடுக்க வைப்பதற்காக அக்குழந்தையைக் கடத்தியதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

arrest theft
arrest theft

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜீனா என்பவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜன 12ஆம் தேதி தனது இரண்டு வயது பெண் குழந்தை ரஷிதாவுடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்து பார்த்தபோது குழந்தை ரஷிதாவை காணவில்லை. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ரயில்வே காவல் துறையிடம் புகாரளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், தீபக் மண்டல் என்பவர் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்ததை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தையைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் குழந்தை ர‌ஷிதாவை ரயில்வே காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

குழந்தையைக் கடத்திய குற்றவாளி

குழந்தையை கடத்திய மேற்கு வங்கத்தை சேர்ந்த தீபக் மண்டலை கைதுசெய்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் குழந்தையை பிச்சை எடுக்க வைப்பதற்கு கடத்தியாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், மீட்கப்பட்ட குழந்தையை சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர் அவர்களது பெற்றோரிடம் இன்று ஒப்படைத்தனர்.

சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை திண்டுக்கலில் மீட்பு

கடத்திய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறை துணை கண்காணிப்பாளர் எட்வர்ட் தெரிவித்தார். கடந்த ஆண்டு மட்டும் காணாமல்போன மற்றும் கடத்தப்பட்ட 243 குழந்தைகளை மீட்டுள்ளதாக ரயில்வே காவல் துறையினர் தெரவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜீனா என்பவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜன 12ஆம் தேதி தனது இரண்டு வயது பெண் குழந்தை ரஷிதாவுடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்து பார்த்தபோது குழந்தை ரஷிதாவை காணவில்லை. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ரயில்வே காவல் துறையிடம் புகாரளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், தீபக் மண்டல் என்பவர் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்ததை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தையைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் குழந்தை ர‌ஷிதாவை ரயில்வே காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

குழந்தையைக் கடத்திய குற்றவாளி

குழந்தையை கடத்திய மேற்கு வங்கத்தை சேர்ந்த தீபக் மண்டலை கைதுசெய்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் குழந்தையை பிச்சை எடுக்க வைப்பதற்கு கடத்தியாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், மீட்கப்பட்ட குழந்தையை சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர் அவர்களது பெற்றோரிடம் இன்று ஒப்படைத்தனர்.

சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை திண்டுக்கலில் மீட்பு

கடத்திய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறை துணை கண்காணிப்பாளர் எட்வர்ட் தெரிவித்தார். கடந்த ஆண்டு மட்டும் காணாமல்போன மற்றும் கடத்தப்பட்ட 243 குழந்தைகளை மீட்டுள்ளதாக ரயில்வே காவல் துறையினர் தெரவித்துள்ளனர்.

Intro:Body:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிச்சை எடுப்பதற்காக குழ்ந்தையை கடத்திய தீபக் மண்டல் என்பவனை ரயில்வே போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

நேற்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை ரசிதாவை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர். இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தையை சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் அவர்களது பெற்றோர்களிடம் இன்று ஒப்படைத்தனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜீனா என்பவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 12 ஆம் தேதி தனது 2 வயது பெண் குழந்தை ரஷிதா வுடன் உறங்கி கொண்டிருந்தார்.

பின்னர் எழுந்து பார்த்தபோது குழந்தை ரஷிதா காணாமல்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தீபக் மண்டல் என்பவர் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்ததை உறுதி செய்தனர்.

இதை தொடர்ந்து குழ்ந்தை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் குழந்தை ர‌ஷிதாவை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர். குழந்தையை கடத்திய மேற்கு வங்கத்தை சேர்ந்த தீபக் மண்டலை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட குழந்தையை சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் அவர்களது பெற்றோர்களிடம் இன்று ஒப்படைத்தனர்.

கடத்திய நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் எட்வர்ட் தெரிவித்தார்.கடந்த ஆண்டு மட்டும் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட 243 குழந்தைகளை மீட்டுள்ளதாக ரயில்வே போலிசார் தெதிவித்துள்ளனர்.

பேட்டி
எட்வர்ட்
ரயில்வே டி எஸ் பி.

மேலும் பொங்கல் பண்டிகையயொட்டி ஏராளமான பயணிகள் ரயில் நிலையம் வருவாதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் தமிழக காவல்துறையினருடன் இணைந்து ரயில்வே போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருவாதாக தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Jan 14, 2020, 6:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.