ETV Bharat / state

ஆள்மாறாட்டம் செய்து நிலமோசடி - இரண்டு பெண்கள் கைது

author img

By

Published : Sep 29, 2020, 9:06 AM IST

சென்னை: ஆள்மாறாட்டம் செய்து 4 ஆயிரத்து 800 சதுர அடி நிலத்தை அபகரித்த இரண்டு பெண்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

CCB arrested two ladies for involving land fraud
நிலமோசடியில் ஈடுபட்ட இருபெண்கள் கைது

சிங்கப்பூர் நாட்டில் வசித்துவருபவர் வின்சென்ட் செல்வசேகர் கேசன். இவருக்கு சொந்தமாக சென்னை பள்ளிக்கரணை ராம் நகர் பகுதியில் 4 ஆயிரத்து 800 சதுர அடி கொண்ட நிலம் ஒன்று உள்ளது. இவரது நிலத்தை சில நபர்கள் போலியான ஆவணங்களை வைத்து ஆள்மாறாட்டம் செய்து அபகரித்துவிட்டதாக பொது அதிகார முகவரான சரவணன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் எழுதி கொடுத்து வந்த மேற்கு மாடவீதி தெருவைச் சேர்ந்த சொர்ணலதா (48) மற்றும் லலிதா (52) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் வின்சென்ட் செல்வசேகர் போல் ஒரு நபரை ஆள்மாறாட்டத்துக்கு ஏற்பாடு செய்து, போலியான பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதன் பின்னர் சொர்ணலதா தன் பெயருக்கு பொது அதிகாரம் பெற்றுள்ளார்.

இதன் மூலம் நிலத்தை பெற்று, தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் வங்கியில் அடமானம் வைத்துள்ளார்.

இதேபோல் கல்பனா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோருக்கு 2 ஆயிரத்து 400 சதுர அடி நிலத்தை போலியான ஆவணங்களை தயாரித்து கொடுத்து விற்றுள்ளதும் தெரியவந்தது.

மேலும் எல்லா பத்திர பதிவுக்கும் லலிதா என்பவர் சாட்சியாக கையெழுத்திட்டுள்ளது தெரியவந்தது. இதனால் சொர்ணலதா மற்றும் லலிதா ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நெதா்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்!

சிங்கப்பூர் நாட்டில் வசித்துவருபவர் வின்சென்ட் செல்வசேகர் கேசன். இவருக்கு சொந்தமாக சென்னை பள்ளிக்கரணை ராம் நகர் பகுதியில் 4 ஆயிரத்து 800 சதுர அடி கொண்ட நிலம் ஒன்று உள்ளது. இவரது நிலத்தை சில நபர்கள் போலியான ஆவணங்களை வைத்து ஆள்மாறாட்டம் செய்து அபகரித்துவிட்டதாக பொது அதிகார முகவரான சரவணன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் எழுதி கொடுத்து வந்த மேற்கு மாடவீதி தெருவைச் சேர்ந்த சொர்ணலதா (48) மற்றும் லலிதா (52) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் வின்சென்ட் செல்வசேகர் போல் ஒரு நபரை ஆள்மாறாட்டத்துக்கு ஏற்பாடு செய்து, போலியான பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதன் பின்னர் சொர்ணலதா தன் பெயருக்கு பொது அதிகாரம் பெற்றுள்ளார்.

இதன் மூலம் நிலத்தை பெற்று, தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் வங்கியில் அடமானம் வைத்துள்ளார்.

இதேபோல் கல்பனா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோருக்கு 2 ஆயிரத்து 400 சதுர அடி நிலத்தை போலியான ஆவணங்களை தயாரித்து கொடுத்து விற்றுள்ளதும் தெரியவந்தது.

மேலும் எல்லா பத்திர பதிவுக்கும் லலிதா என்பவர் சாட்சியாக கையெழுத்திட்டுள்ளது தெரியவந்தது. இதனால் சொர்ணலதா மற்றும் லலிதா ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நெதா்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.