சென்னை: Pachaiyappa's College students assaulting case: சென்னை டிபி சத்திரம் செனாய் நகரைச் சேர்ந்த சக்திவேல், அரசுப் பேருந்து ஓட்டுநராகவும் சேத்துபட்டு பகுதியைச்சேர்ந்த கண்ணன் அரசுப்பேருந்து நடத்துனராகவும் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று (டிசம்பர் 23) அவர்கள் 15ஜி என்ற அரசுப்பேருந்தில் பிராட்வேயில் இருந்து அரும்பாக்கம் எம்எம்டிஏ-வுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றனர்.
அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கூட்டமாகப் பேருந்தில் ஏறினர். அவர்களிடம் நடத்துநர் கண்ணன் பஸ்பாஸ் இல்லாதவர்கள் டிக்கெட் எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
நடத்துநர் கேட்டுக்கொண்டதன் பேரில், ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தினார்.
பின்னர் நடத்துநர், ஓட்டுநர் ஆகியோர் மீண்டும் டிக்கெட் கேட்டதால் ஆத்திரமடைந்த இரண்டு மாணவர்கள் அவர்களை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் காவல் துறையினர் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தோட்டப் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள்: விவசாயிகள் அச்சம்