சென்னை: ஐஐடி- சென்னை கார்பன் ஜீரோ சேலஞ்ச் (CZC) என்ற அமைப்பின் மூலம் பருவநிலை மாற்றம், மாசுபாடு மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற நெருக்கடிகளால் துரிதப்படுத்தப்பட்டுள்ள ‘வளக் குறைவு மற்றும் மாசுபாடு’ மீது கவனம் செலுத்துகிறது. மேலும் இதற்கான ஒரு போட்டியை நடத்த உள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’ஐஐடி- சென்னை கார்பன் ஜீரோ சேலஞ்ச் 2022 நிலைத்தன்மை கண்டுபிடிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் முயற்சிகளை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. CZC 2022, ஒரு அகில இந்திய சூழல்-புதுமை மற்றும் தொழில்முனைவோர் போட்டி, இந்தியாவில் சுற்றுச்சூழல் கண்டுபிடிப்புகளின் ஆய்வகத்திலிருந்து சந்தை மாற்றத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது’ எனக்கூறப்பட்டுள்ளது.
குறுகிய பட்டியலிடப்பட்ட குழுக்கள் ஸ்டார்ட்-அப்களை நிறுவுவதற்கும், வணிகமயமாக்கல் மூலம் தங்கள் யோசனையை சந்தைக்கு எடுத்துச் செல்வதற்கும் நிதி மற்றும் வழிகாட்டி ஆதரவைப் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) அறிக்கையின்படி, ஆசியாவின் நகரங்களில் 80 சதவீத காற்று மாசுபாடு போக்குவரத்துத் துறையின் காரணமாக 2035ஆம் ஆண்டில் ஆசியாவில் 1 பில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் இருக்கும்.
சுற்றுச்சூழல் சீர்கேட்டால் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகிறது என்று இந்திய அரசின் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐஐடி - சென்னையின் இயக்குநர் வி.காமகோடி கூறுகையில், “சென்னை கார்பன் ஜீரோ சேலஞ்ச் (CZC) ஒரு போட்டியை நடத்த உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்பவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற, சென்னை ஐஐடி அதன் காப்புரிமை முறையைத் திறக்கும். இந்தப்போட்டியானது ஒரு வலுவான அடைகாக்கும் சூழல் அமைப்பையும் கொண்டுள்ளது. இது ஸ்டார்ட்-அப்களை முதிர்ச்சியடையச் செய்வதற்கும் அவர்களின் யோசனைகளை சாத்தியமான வணிகமாக மாற்றுவதற்கும் உதவும்” என்றார்.
இதையும் படிங்க: பிரமிக்க வைக்கும் "வியாழன்" கோளின் புகைப்படங்கள்... ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அடுத்தபணி