ETV Bharat / state

சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் உரிமம் ரத்து?

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தைச் சம்பவ இடத்திலேயே,போக்குவரத்து உதவி ஆய்வாளர்களே ரத்து செய்யும் திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.

author img

By

Published : Jun 6, 2019, 12:09 PM IST

ஓட்டுநர் உரிமம் ரத்து

சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பைக் ரேஸ்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளன. நான்கு நாட்களில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி பைக் ரேஸில் ஈடுபட்ட 188 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோன்று, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 685 பேர் மீதும் கடந்த நான்கு நாட்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பைக் ரேஸில் ஈடுபட்டவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் காவல் துறையினர் போக்குவரத்துத் துறைக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.

கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டுபவர்கள், பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் என 286 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்துக் காவல் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும், சென்னையில் தொடர்ந்து பந்தயத்தில் ஈடுபடும் குழுக்கள் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாகவும், முற்றிலும் பைக் ரேஸை கட்டுப்படுத்த ஆலோசனைகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, 57 ஆயிரத்து 636 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப் போக்குவரத்துத் துறைக்குச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இதில் 37 ஆயிரத்து 338 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய அனுப்பப்பட்ட பரிந்துரை, பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பைக் ரேஸ்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளன. நான்கு நாட்களில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி பைக் ரேஸில் ஈடுபட்ட 188 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோன்று, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 685 பேர் மீதும் கடந்த நான்கு நாட்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பைக் ரேஸில் ஈடுபட்டவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் காவல் துறையினர் போக்குவரத்துத் துறைக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.

கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டுபவர்கள், பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் என 286 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்துக் காவல் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும், சென்னையில் தொடர்ந்து பந்தயத்தில் ஈடுபடும் குழுக்கள் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாகவும், முற்றிலும் பைக் ரேஸை கட்டுப்படுத்த ஆலோசனைகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, 57 ஆயிரத்து 636 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப் போக்குவரத்துத் துறைக்குச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இதில் 37 ஆயிரத்து 338 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய அனுப்பப்பட்ட பரிந்துரை, பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை சம்பவ இடத்திலேயே,போக்குவரத்து உதவி ஆய்வாளர்களே ரத்து செய்யும் திட்டம் விரைவில் அமலாகிறது........

சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பைக் ரேஸ்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது . இதனையடுத்து கடந்த 4 நாட்களில் பைக் ரேஸ் ஓட்டுபவர்களை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த 4 நாட்களில் 188 பேர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி பைக் ரேசில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். 

இதேபோன்று போக்குவரத்து விதிமீறல்கள் ஈடுபட்ட 685 பேர் மீதும் கடந்த 4 நாட்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பைக் ரேசில் ஈடுபட்டவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும்  காவல்துறையினர் போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.அதன்படி கடந்த 4 நாட்களாக,அதிவேகமாகவும்,அது மட்டுமல்லாது 138 இரு சக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தாறுமாறாக வாகனத்தை ஓட்டுபவர்கள்,பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் என 286 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து போலிசார் பரிந்துரை செய்துள்ளனர் .மேலும் சென்னையில் தொடர்ந்து பந்தயத்தில் ஈடுபடும் குழுக்கள் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாகவும்,முற்றிலும் பைக் ரேஸை கட்டுப்படுத்த ஆலோசனைகள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 மாதங்களில் மட்டும் சென்னை நகரில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றவர்கள் மீது 18 ஆயிரத்து 337 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து விதிகளை கடுமையாக மீறி வாகனங்கள் ஓட்டிச் சென்றதாக சென்னையில் 57 ஆயிரத்து 636 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து துறைக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.இதில் 37 ஆயிரத்து 338 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய அனுப்பப்பட்ட பரிந்துரை, போக்குவரத்துத் துறையின் பரிசீலனையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


சென்னையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை கடுமையாக மீறுவோர் மீதான இந்த நடவடிக்கை தொடரும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 
ஆறு முக்கிய விதி மீறல்கள் 
அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்,
சிக்னலை மதிக்காமல் செல்லுதல், செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுதல்,குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்,அதிகபாரம் ஏற்றி செல்லுதல்,சரக்கு வாகனத்தில் பயணிகள் செல்லுதல் ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு வருவதாகவும்,தற்போது ஹெல்மெட் அணியாதவர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாதவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு வருவதாக போக்குவரத்து போலிசார் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.