ETV Bharat / state

அரசுப் பேருந்து ஓட்டுநர்களால் தொடர் விபத்து...! - அஞ்சும் பொதுமக்கள் - அரசுப் பேருந்து ஓட்டுநரால் ஏற்படும் விபத்து

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தொடர் விபத்தை ஏற்படுத்திவரும் அரசு மாநகரப் பேருந்து ஓட்டுநர்களின் மீது போக்குவரத்து அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விபத்துக்குள்ளான ஆட்டோ
author img

By

Published : Sep 30, 2019, 1:02 PM IST

Updated : Sep 30, 2019, 1:15 PM IST

சென்னையின் கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், வேளச்சேரி வழியாக தி. நகர் செல்லும் மாநகரப் பேருந்துகள் எப்போதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் வேகமாகவும் செல்கின்றன. அரசுப் பேருந்து ஓட்டுநர்களின் இந்தச் செயலால் அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பலமுறை போக்குவரத்துத் துறை அலுவலர்களிடம் முறையிட்டும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விபத்து ஏற்படுத்திய பேருந்து
விபத்து ஏற்படுத்திய பேருந்து

இந்நிலையில், தற்போது வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள சதாசிவம் நகரில் வேகமாக வந்த அரசுப் பேருந்து, ஆட்டோவின் மீது மோதியதில் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அரசுப் போக்குவரத்துத் துறை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : லாரியின் மீது மோதிய அரசு பேருந்து மூவர் பரிதாப பலி!

சென்னையின் கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், வேளச்சேரி வழியாக தி. நகர் செல்லும் மாநகரப் பேருந்துகள் எப்போதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் வேகமாகவும் செல்கின்றன. அரசுப் பேருந்து ஓட்டுநர்களின் இந்தச் செயலால் அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பலமுறை போக்குவரத்துத் துறை அலுவலர்களிடம் முறையிட்டும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விபத்து ஏற்படுத்திய பேருந்து
விபத்து ஏற்படுத்திய பேருந்து

இந்நிலையில், தற்போது வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள சதாசிவம் நகரில் வேகமாக வந்த அரசுப் பேருந்து, ஆட்டோவின் மீது மோதியதில் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அரசுப் போக்குவரத்துத் துறை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : லாரியின் மீது மோதிய அரசு பேருந்து மூவர் பரிதாப பலி!

Intro:Body:தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்தும்
V 51பேருந்து போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள பொதுமக்கள் வலியுறுத்தல்.

கீழ்க்கட்டளை மடிப்பாக்கம் வேளச்சேரி வழியாக  தி. நகர் செல்லும் இந்த பேருந்துகள் எப்பொழுதும் போக்குவரத்து விதிகளை மீறியும் வேகமாகவும் பொதுமக்களுக்கும் இருசக்கர பயணிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செல்வதாக பலமுறை போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் இது குறித்து எந்தவிதமான விசாரணையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.தற்போது வேளச்சேரி மெயின் ரோடு சதாசிவம் நகரில் ஒரு ஆட்டோவை வேகமாக வந்த பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுனர் படுகாயமடைந்து ஆபத்தான சூழ்நிலையில் உள்ளார் அரசு ஓட்டுனர்கள் வண்டியை ஓரம் கட்டி விட்டு வழக்கம் போல் தங்கள் பணியை தொடர்வார்கள் இதே நிலைதான் நீடிக்கும்.இது தொடர்பாக போக்குவரத்து துரை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.Conclusion:
Last Updated : Sep 30, 2019, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.