ETV Bharat / state

பாஜக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் கொடும்பாவி எரிப்பு!

author img

By

Published : Oct 27, 2020, 4:58 PM IST

Updated : Oct 27, 2020, 5:05 PM IST

சென்னை: பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவனுக்கு எதிராக பாஜக மகளிரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனிடையே, சென்னையில் திருமாவளவனின் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

bjp-party-people-protest-against-vcks-thirumavalavan-
கொடும்பாவி எரிக்கப்பட்டதால் பரபரப்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், நடிகை கௌதமி, பாஜக நிர்வாகிகள் சுமதி வெங்கடேசன், காயத்ரி ரகுராம், சங்கவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருமாவளவனுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில கலை, கலாசாரப் பிரிவுத் தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம், திருமாவளவனுக்கு கெட்ட நேரம் தொடங்கிவிட்டதாகவும், இனி அவரை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திருமாவளவனின் தொகுதிக்குச் சென்றால் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்காது என்ற காரணத்துக்காகவே நடிகை குஷ்பு கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

”அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூறுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெண்களை மதிப்பதை திருமாவளவனின் அரசியல் லாபத்துக்காகத் துளியும் விட்டுத்தரக் கூடாது. திருமாவளவன் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என நடிகை கௌதமி வலியுறுத்தினார்.

திருமாவளவனுக்கு எதிராக பாஜக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜகவின் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜக தொண்டர்கள் சிலர் திருமாவளவனின் கொடும்பாவியை எரித்தும், சாலை மறியலிலும் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:'அறவழியில் போராடிய பாஜகவினரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது'- எல். முருகன்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், நடிகை கௌதமி, பாஜக நிர்வாகிகள் சுமதி வெங்கடேசன், காயத்ரி ரகுராம், சங்கவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருமாவளவனுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில கலை, கலாசாரப் பிரிவுத் தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம், திருமாவளவனுக்கு கெட்ட நேரம் தொடங்கிவிட்டதாகவும், இனி அவரை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திருமாவளவனின் தொகுதிக்குச் சென்றால் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்காது என்ற காரணத்துக்காகவே நடிகை குஷ்பு கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

”அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூறுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெண்களை மதிப்பதை திருமாவளவனின் அரசியல் லாபத்துக்காகத் துளியும் விட்டுத்தரக் கூடாது. திருமாவளவன் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என நடிகை கௌதமி வலியுறுத்தினார்.

திருமாவளவனுக்கு எதிராக பாஜக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜகவின் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜக தொண்டர்கள் சிலர் திருமாவளவனின் கொடும்பாவியை எரித்தும், சாலை மறியலிலும் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:'அறவழியில் போராடிய பாஜகவினரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது'- எல். முருகன்

Last Updated : Oct 27, 2020, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.