ETV Bharat / state

‘இன்பதுரை தற்போது துன்பதுரையாக உள்ளார்’ - ஸ்டாலின் - BJP government in Tamil Nadu

சென்னை: ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை தற்போது துன்பதுரையாக இருக்கிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின்
author img

By

Published : Oct 5, 2019, 12:56 PM IST

Updated : Oct 5, 2019, 3:05 PM IST

புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் கடந்த செப்டம்பர் மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கார்த்திகேயன், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பிரமாண்ட விழா ஏற்பாடு செய்து, அதில் தன் தலைமையில் 5,000 அமமுகவினரை திமுகவில் இணைக்கவிருப்பதாகக் கூறியிருந்தார்.

அதனடிப்படையில், அந்த நிகழ்ச்சி இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆவுடையார்கோயில், மணமேல்குடி உள்ளிட்ட புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமமுகவினர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ‘நீங்கள் அனைவரும் பிறந்த வீட்டிற்கு வந்துள்ளீர்கள், உங்களை வரவேற்கிறேன். பரணி தேர்தல் நேரத்தில் கில்லாடியாகப் பணிபுரிவார் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் அங்கு விசுவாசமாக இருப்பார் என்பது எனக்குத் தெரியும். தற்போது திமுகவில் இருக்கிறார். அங்கு எப்படி பணிபுரிந்தாரோ அதைவிட பல மடங்கு இங்கு பணிபுரிவார் என்ற நம்பிக்கை உள்ளது. அங்கு உங்களை ஊக்குவிக்க ஆட்கள் இல்லை. ஆனால் இங்கு நான் உள்ளேன்’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ இன்பதுரை தற்போது துன்பதுரையாக உள்ளார். தேர்தல் முடிவுகள் முறையாக வந்திருந்தால் தற்போது திமுக ஆட்சி இருந்திருக்கும். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே, திட்டமிட்டு மோடி, அதிமுக ஆட்சி அமைத்த மாதிரி வாழ்த்து செய்தி அனுப்பிவிட்டார். பிறகு அலுவலர்கள் என்ன செய்வார்கள்.

நிகழ்ச்சியில் பேசும் திமுக தலைவர் ஸ்டாலின்

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையில் வெற்றிபெற்றது யார் என்று தெரியும் ஆனால் என்னால் சொல்லமுடியாது. சொன்னால் நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும். நீங்களே புரிந்து கொள்ளுங்கள். விக்கிரவாண்டி, நாங்குநேரி வெற்றியுடன் ராதாபுரம் தொகுதியும் கிடைக்கும். தற்போது நடந்துவருவது எம்ஜிஆர் ஆட்சியோ, ஜெயலலிதா ஆட்சியோ இல்லை. எடப்பாடி ஆட்சி அதவாது பாஜக ஆட்சிதான் நடந்துவருகிறது. திரைப்பட இயக்குநர் மணிரத்னம் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: 'இத அப்பவே கேட்டிருக்கலாம்...!' - முதலமைச்சருக்கு துரைமுருகன் அறிவுரை

புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் கடந்த செப்டம்பர் மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கார்த்திகேயன், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பிரமாண்ட விழா ஏற்பாடு செய்து, அதில் தன் தலைமையில் 5,000 அமமுகவினரை திமுகவில் இணைக்கவிருப்பதாகக் கூறியிருந்தார்.

அதனடிப்படையில், அந்த நிகழ்ச்சி இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆவுடையார்கோயில், மணமேல்குடி உள்ளிட்ட புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமமுகவினர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ‘நீங்கள் அனைவரும் பிறந்த வீட்டிற்கு வந்துள்ளீர்கள், உங்களை வரவேற்கிறேன். பரணி தேர்தல் நேரத்தில் கில்லாடியாகப் பணிபுரிவார் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் அங்கு விசுவாசமாக இருப்பார் என்பது எனக்குத் தெரியும். தற்போது திமுகவில் இருக்கிறார். அங்கு எப்படி பணிபுரிந்தாரோ அதைவிட பல மடங்கு இங்கு பணிபுரிவார் என்ற நம்பிக்கை உள்ளது. அங்கு உங்களை ஊக்குவிக்க ஆட்கள் இல்லை. ஆனால் இங்கு நான் உள்ளேன்’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ இன்பதுரை தற்போது துன்பதுரையாக உள்ளார். தேர்தல் முடிவுகள் முறையாக வந்திருந்தால் தற்போது திமுக ஆட்சி இருந்திருக்கும். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே, திட்டமிட்டு மோடி, அதிமுக ஆட்சி அமைத்த மாதிரி வாழ்த்து செய்தி அனுப்பிவிட்டார். பிறகு அலுவலர்கள் என்ன செய்வார்கள்.

நிகழ்ச்சியில் பேசும் திமுக தலைவர் ஸ்டாலின்

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையில் வெற்றிபெற்றது யார் என்று தெரியும் ஆனால் என்னால் சொல்லமுடியாது. சொன்னால் நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும். நீங்களே புரிந்து கொள்ளுங்கள். விக்கிரவாண்டி, நாங்குநேரி வெற்றியுடன் ராதாபுரம் தொகுதியும் கிடைக்கும். தற்போது நடந்துவருவது எம்ஜிஆர் ஆட்சியோ, ஜெயலலிதா ஆட்சியோ இல்லை. எடப்பாடி ஆட்சி அதவாது பாஜக ஆட்சிதான் நடந்துவருகிறது. திரைப்பட இயக்குநர் மணிரத்னம் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: 'இத அப்பவே கேட்டிருக்கலாம்...!' - முதலமைச்சருக்கு துரைமுருகன் அறிவுரை

Intro:Body:தற்போது தமிழகத்தில் நடந்து வருவது பிஜேபி ஆட்சி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் கடந்த செப்டம்பர் மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், புதுகோட்டை மாவட்டத்தில் ஒரு பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்து , அந்த விழாவில் தன் தலைமையில் 5000 அமமுகவினரை திமுகவில் இணைப்பதாக அப்போது கூறினார்.

அதன் அடிப்படையில் அந்த நிகழ்ச்சி தற்போது சென்னை திமுக தலைமையகமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் த நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி, புதுக்கோட்டை, கூத்தாடி வயல் ரத்தின கோட்டை, குருப காடு , ஆவுடையார் கோயில், மணல்மேடு குடி உள்ளிட்ட பகுகளில் உள்ள தாலுக்கா, ஊராட்சி, ஒன்றியம் ஆகிய அமமுக நிர்வாகிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், நீங்கள் அனைவரும் பிறந்த வீட்டிற்கு வந்துள்ளீர்கள் உங்களை வரவேற்கிறேன் என தெரிவித்தார். பரணி தேர்தலில் கில்லாடியாக பணிபுரிவார் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். அவர் எந்த கட்சியில் இருந்தாலோ அங்கு விஷ்வாசமாக இருப்பார் என்பது எனக்கு தெரியும். தற்போது திமுகவில் இருக்கிறார் அங்கு எப்படி பணிபுரிந்தாரோ அதை விட பல் மடங்கு இங்கு பணிபுரிவார் என்ற நம்பிக்கை உள்ளது. அங்கு உங்களை ஊக்கவிக்க ஆட்கள் இல்லை. ஆனால் இங்கு நான் உள்ளேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கின்றது. உள்ளாட்சி தேர்தல்
ஒரு திரைப்பட வசனம் போல் "வரும் ஆனால் வராது" என்பது போல் உள்ளது. வரும் ஆனால் எப்போ வரும் என தெரியவில்லை.

ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ இன்பதுரை தற்போது துன்பதுரையாக உள்ளார். முறையாக தேர்தல் 2016இல் நடந்திருந்தால் திமுக ஆட்சி தற்போது இருந்திருக்கும். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே, திட்டமிட்டு மோடி அதிமுக ஆட்சி அமைத்த மாதிரி வாழ்த்துச்செய்தி அனுப்பிவிட்டார். பிறகு அதிகாரிகள் என்ன செய்வார்கள்.

ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றது யார் என்று தெரியும் ஆனால் என்னால் சொல்லமுடியாது. சொன்னால் நீதிமன்றம் அவமதிப்பு ஆகிவிடும். நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்தார். விக்கிரவாண்டி, நாங்குநேரி வெற்றி உடன் ராதாபுரம் தொகுதியும் கிடைக்கும்

தற்போது நடந்து வருவது எம்.ஜி.ஆர் ஆட்சியோ ஜெயலலிதா ஆட்சியோ இல்லை. எடப்பாடி ஆட்சி அதவாது பிஜேபி ஆட்சி நடந்து வருகிறது.

தேச துரோக வழக்கு மணிரத்தனம் உள்ளிட்டவர்கள் மீது பதியப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்.
மோடி இதில் தலையீட்டு உடனடியாக வழக்குகளை திரும்ப பெற்று ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்திகிறேன் என தெரிவித்தார்.Conclusion:
Last Updated : Oct 5, 2019, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.