ETV Bharat / state

பொறியியல் மாணவர் தற்கொலை: காதல் தோல்வி காரணமா?

சென்னை: மணலி அருகே பொறியியல் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கை விசாரித்த காவல் துறையினர், மாணவர் காதல் தோல்வியின் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

author img

By

Published : May 28, 2020, 10:27 AM IST

பொறியியல் மாணவர் தற்கொலைக்கு
பொறியியல் மாணவர் தற்கொலைக்கு

சென்னை மணலி துர்கை அவென்யு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (21). இவர் தனியார் கல்லூரியில் பொறியியல் படித்தார். இந்நிலையில் மே 26ஆம் தேதியன்று இரவு நேரத்தில் தனது அறைக்குள் நடராஜன் வழக்கம்போல் உறங்கச் சென்றுள்ளார்.

பின்னர், நேற்று காலை (மே 25ஆம் தேதி) வெகுநேரமாகியும் அறையை விட்டு அவர் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர், கதவை திறந்து பார்த்தனர். அப்போது, நடராஜன் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி காவல் துறையினர், நடராஜனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையைத் தொடங்கினர். முதல்கட்ட விசாரணையில், நடராஜன் அவருடன் படிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண், வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த நடராஜன், காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து அவரது பெற்றோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: செல்போன் டவர் மீது ஏறி 'குடி'மகன் ரகளை! - காவல் துறை விசாரணை

சென்னை மணலி துர்கை அவென்யு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (21). இவர் தனியார் கல்லூரியில் பொறியியல் படித்தார். இந்நிலையில் மே 26ஆம் தேதியன்று இரவு நேரத்தில் தனது அறைக்குள் நடராஜன் வழக்கம்போல் உறங்கச் சென்றுள்ளார்.

பின்னர், நேற்று காலை (மே 25ஆம் தேதி) வெகுநேரமாகியும் அறையை விட்டு அவர் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர், கதவை திறந்து பார்த்தனர். அப்போது, நடராஜன் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி காவல் துறையினர், நடராஜனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையைத் தொடங்கினர். முதல்கட்ட விசாரணையில், நடராஜன் அவருடன் படிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண், வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த நடராஜன், காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து அவரது பெற்றோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: செல்போன் டவர் மீது ஏறி 'குடி'மகன் ரகளை! - காவல் துறை விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.