ETV Bharat / state

பேனர் வழக்கில் கைது செய்யப்பட்டோரை சிறையில் அடைக்க முடியாது: நீதிமன்றம்

author img

By

Published : Sep 28, 2019, 2:57 PM IST

சென்னை: பேனர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயகோபாலை தவிர்த்து மற்ற நான்கு பேரை சிறையில் அடைக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

banner

சென்னையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்து 15 நாட்கள் ஆகின்றன. ஆனால், பேனரை வைத்த ஜெயகோபால் கைது செய்யப்படாமல் இருந்தார். இதையடுத்து, காவல் துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது. அதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ஜெயகோபாலை சிபிசிஐடி காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். பின்னர், அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்ட ஜெயகோபால், இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பேனரை வைத்த பழனி, லட்சுமி காந்த், சுப்பிரமணி, சங்கர் ஆகிய நான்கு பேர் கூடுதலாக கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் மீதான வழக்கை விசாரித்த ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நால்வரும் வெறும் கூலி தொழிலாளர்கள் மட்டுமே என்றும், நீதிமன்றம் சிறையில் அவர்களை அடைக்க முடியாது எனவும் மறுப்பு தெரிவித்தார்.

மேலும், பிணையில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்களை விடுவிப்பது குறித்து காவல் துறையினரே முடிவெடுக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: சுபஸ்ரீ உயிரிழப்பு விவகாரம்: அதிமுக பிரமுகருக்கு சிறை!

சென்னையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்து 15 நாட்கள் ஆகின்றன. ஆனால், பேனரை வைத்த ஜெயகோபால் கைது செய்யப்படாமல் இருந்தார். இதையடுத்து, காவல் துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது. அதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ஜெயகோபாலை சிபிசிஐடி காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். பின்னர், அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்ட ஜெயகோபால், இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பேனரை வைத்த பழனி, லட்சுமி காந்த், சுப்பிரமணி, சங்கர் ஆகிய நான்கு பேர் கூடுதலாக கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் மீதான வழக்கை விசாரித்த ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நால்வரும் வெறும் கூலி தொழிலாளர்கள் மட்டுமே என்றும், நீதிமன்றம் சிறையில் அவர்களை அடைக்க முடியாது எனவும் மறுப்பு தெரிவித்தார்.

மேலும், பிணையில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்களை விடுவிப்பது குறித்து காவல் துறையினரே முடிவெடுக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: சுபஸ்ரீ உயிரிழப்பு விவகாரம்: அதிமுக பிரமுகருக்கு சிறை!

Intro:Body:பேனர் வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 4 பேரை சிறையில் அடைக்கமுடியாது என ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு.

பேனரை வைத்த பழனி,லட்சுமி காந்த்,சுப்பிரமணி, சங்கர் ஆகியோர் வெறும் கூலி தொழிலாளர்கள் மட்டுமே என நீதிமன்றம் சிறையில் அடைக்க மறுப்பு.

ஜாமினில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர்களை விடுவிப்பது குறித்து போலிசாரே முடிவெடுக்கலாம் என நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.