ETV Bharat / state

நாளை வங்கிகள் வேலை நிறுத்தம்...வங்கி சேவை பாதிக்குமா?

author img

By

Published : Oct 21, 2019, 11:35 PM IST

சென்னை: வங்கிகள் இணைப்பைக் கண்டித்து நாளை இரண்டு வங்கி ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

வங்கிகள் வேலை நிறுத்தம்

நாட்டில் உள்ள 10 வங்கிகளை நான்காக இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்குப் பல்வேறு வங்கி சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, கடந்த மாதம் மூன்று வங்கி அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுப்பதாக மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் உறுதியளித்ததையடுத்து அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், வங்கிகள் இணைப்பு, வங்கித்துறை சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (BEFI) ஆகிய இரண்டு சங்கங்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளனர். வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் வங்கி சேவைகள் குறையும், சிறு, குறு நிறுவனங்களுக்குக் கடன் சேவை அளிக்கப்படுவது குறையும், வங்கியில் புதிய வேலைவாய்ப்புகள் பறிபோகும் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாளை நடைபெறும் போராட்டத்தில் நாடு முழுவதும் நான்கு லட்சம் பேர் கலந்து கொள்வதால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் தங்களது வங்கிச் சேவையை பாதிக்காது என எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது. அதேநேரத்தில் ஊழியர்கள் போராட்டத்தால் தங்களது சேவை முழுமையாக பாதிக்கப்படும் என பேங்க் ஆஃப் பரோடா, சிண்டிக்கேட் வங்கி ஆகிய வங்கிகள் பங்குச் சந்தைகளுக்கு தகவல் கொடுத்துள்ளன.

முன்னதாக அறிவிக்கப்பட்ட வங்கி அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்த இரு சங்கங்கள் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் ஃபேஸ்புக் இல்லை

நாட்டில் உள்ள 10 வங்கிகளை நான்காக இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்குப் பல்வேறு வங்கி சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, கடந்த மாதம் மூன்று வங்கி அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுப்பதாக மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் உறுதியளித்ததையடுத்து அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், வங்கிகள் இணைப்பு, வங்கித்துறை சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (BEFI) ஆகிய இரண்டு சங்கங்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளனர். வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் வங்கி சேவைகள் குறையும், சிறு, குறு நிறுவனங்களுக்குக் கடன் சேவை அளிக்கப்படுவது குறையும், வங்கியில் புதிய வேலைவாய்ப்புகள் பறிபோகும் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாளை நடைபெறும் போராட்டத்தில் நாடு முழுவதும் நான்கு லட்சம் பேர் கலந்து கொள்வதால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் தங்களது வங்கிச் சேவையை பாதிக்காது என எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது. அதேநேரத்தில் ஊழியர்கள் போராட்டத்தால் தங்களது சேவை முழுமையாக பாதிக்கப்படும் என பேங்க் ஆஃப் பரோடா, சிண்டிக்கேட் வங்கி ஆகிய வங்கிகள் பங்குச் சந்தைகளுக்கு தகவல் கொடுத்துள்ளன.

முன்னதாக அறிவிக்கப்பட்ட வங்கி அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்த இரு சங்கங்கள் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் ஃபேஸ்புக் இல்லை

Intro:சென்னை:

வங்கிகள் இணைப்பைக் கண்டித்து நாளை இரண்டு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.Body:
நாட்டில் உள்ள 10 வங்கிகளை நான்காக இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு வங்கி சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, கடந்த மாதம் மூன்று வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுப்பதாக மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் உறுதியளித்ததையடுத்து அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், நாளை ஆக்டோபர் 22 ஆம் தேதி, வங்கிகள் இணைப்பு, வங்கித்துறை சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (BEFI) ஆகிய இரண்டு சங்கங்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளனர். வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் வங்கி சேவைகள் குறையும், சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் சேவை அளிக்கப்படுவது குறையும், வங்கியில் புதிய வேலைவாய்ப்புகள் பறிபோகும் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவர்கள் கடந்த முறை அறிவிக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் போராட்டத்தில் நாடு முழுவது நான்கு லட்சம் பேர் கலந்துகொள்வதால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் தங்களது வங்கிச் சேவையை பாதிக்காது என எஸ்பிஐ வங்கி கூறுயுள்ளது. அதேநேரத்தில் ஊழியர்கள் போராட்டத்தால் தங்களது சேவை பகுதியாகவோ, முழுமையாகவோ பாதிக்கப்படும் என பேங்க் ஆஃப் பரோடா, சிண்டிக்கேட் ஆகிய வங்கிகள் பங்குச் சந்தைகளுக்கு தகவல் கொடுத்துள்ளன.
Conclusion:use file photo
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.