ETV Bharat / state

'5 ஆண்டுகள்'... '4 மாநிலங்கள்' தொடர் கொள்ளை; ஆட்டோ ராணியை மடக்கிய சென்னை தனிப்படை! - auto rani arrested at andhra

சென்னை: ஆட்டோவில் மூதாட்டிகளை குறிவைத்து நூதன முறையில் நகையைக் கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண்ணை, சென்னை தனிப்படை காவல் துறை, ஆந்திராவில் கைது செய்துள்ளனர்.

auto
ஆட்டோ ராணி
author img

By

Published : Dec 10, 2019, 12:03 AM IST

சென்னையில் கடந்த சில மாதங்களாக ஆட்டோவில் லிப்ட் கொடுப்பதாகக் கூறி மூதாட்டிகளிடம் ஆசை வார்த்தையில் பேசி, ஆட்டோவில் ஏற்றுகின்றனர். பின்னர் அவர்களிடம் நகை அறுந்து இருப்பதாகக் கூறி நம்ப வைத்து, நகையை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக சிலர் வைத்துள்ளனர். இதே போன்ற புகார்கள் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து காவல் துறையினர் கொள்ளைக் கும்பலைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளைக் கும்பல் ஆந்திராவில் சித்தூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தனிப்படை காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக ஆந்திராவுக்கு விரைந்த தனிப்படைக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு குற்றவாளி அகிலாவைக் கைது செய்யவிடாமல், ’தீரன்’ பட பாணியில் கிராமமே போலீசாரைத் தடுத்துள்ளது. அதன்பின், அகிலாவை கைது செய்ய ஆந்திரா காவல் துறை உதவியை சென்னை தனிப்படை நாடியுள்ளது. பின்னர், அவர்களின் உதவியோடு, ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட அகிலா என்ற பெண்ணை கைது செய்தனர். இவரது கூட்டாளியான அலமேலு மற்றும் கனகா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

பின்னர் காவல்துறை அகிலாவிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்துள்ளன. அகிலா வசிக்கும் கிராமத்தில் உள்ள அனைவருமே இது போன்று கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் ஆட்டோவில் மூன்று குழுக்களாகப் பிரிந்து, மூதாட்டியை மட்டும் குறிவைத்து, கொள்ளையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் இதே போல் கடந்த ஐந்து ஆண்டுகளாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தங்கள் மீது நான்கு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, சென்னைக்கு அழைத்து வந்து அகிலாவிடமிருந்து இரண்டு சவரன் நகைகள் மற்றும் ஆட்டோவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தற்போது, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தேவாலயத்தில் பாலியல் புகார் - மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு

சென்னையில் கடந்த சில மாதங்களாக ஆட்டோவில் லிப்ட் கொடுப்பதாகக் கூறி மூதாட்டிகளிடம் ஆசை வார்த்தையில் பேசி, ஆட்டோவில் ஏற்றுகின்றனர். பின்னர் அவர்களிடம் நகை அறுந்து இருப்பதாகக் கூறி நம்ப வைத்து, நகையை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக சிலர் வைத்துள்ளனர். இதே போன்ற புகார்கள் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து காவல் துறையினர் கொள்ளைக் கும்பலைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளைக் கும்பல் ஆந்திராவில் சித்தூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தனிப்படை காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக ஆந்திராவுக்கு விரைந்த தனிப்படைக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு குற்றவாளி அகிலாவைக் கைது செய்யவிடாமல், ’தீரன்’ பட பாணியில் கிராமமே போலீசாரைத் தடுத்துள்ளது. அதன்பின், அகிலாவை கைது செய்ய ஆந்திரா காவல் துறை உதவியை சென்னை தனிப்படை நாடியுள்ளது. பின்னர், அவர்களின் உதவியோடு, ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட அகிலா என்ற பெண்ணை கைது செய்தனர். இவரது கூட்டாளியான அலமேலு மற்றும் கனகா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

பின்னர் காவல்துறை அகிலாவிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்துள்ளன. அகிலா வசிக்கும் கிராமத்தில் உள்ள அனைவருமே இது போன்று கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் ஆட்டோவில் மூன்று குழுக்களாகப் பிரிந்து, மூதாட்டியை மட்டும் குறிவைத்து, கொள்ளையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் இதே போல் கடந்த ஐந்து ஆண்டுகளாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தங்கள் மீது நான்கு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, சென்னைக்கு அழைத்து வந்து அகிலாவிடமிருந்து இரண்டு சவரன் நகைகள் மற்றும் ஆட்டோவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தற்போது, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தேவாலயத்தில் பாலியல் புகார் - மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு

Intro:Body:சென்னையில் ஆட்டோ வைத்து மூதாட்டிகளை குறிவைத்து நூதன முறையில் நகையை கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண்ணை சென்னை தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில மாதங்களாக ஆட்டோவில் லிப்ட் கொடுப்பதாக கூறி பெண்கள் ஆசை வார்த்தை கூறி மூதாட்டியை ஏற்றி பின்னர் நகை அறுந்து இருப்பதாக கூறி அவர்களை நம்பவைத்து பையில் வைக்கும்போது நகையை கொள்ளையடிப்பது வாடிக்கையாக நடந்து வந்தது.இதே போன்ற புகார்கள் தொடர்ந்து காவல் நிலையத்தில் குவிய தொடங்கியது.

இதனால் இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலிசார் அமைத்து அந்த பெண்களை தீவிரமாக தேடி வந்தனர்.இந்த நிலையில் கொள்ளையடித்த பெண்கள் ஆந்திராவைச் சேர்ந்த சித்தூர் குப்பம் பகுதியில் சென்னை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலிசார் ஆந்திராவிற்கு விரைந்தனர். அங்கு சென்று ஆட்டோ திருட்டில் ஈடுப்பட்ட அகிலாவை கைது செய்ய முற்படும் போது அந்த கிராமமே போலிசாரை தடுத்து உள்ளனர்.

பின்னர் ஆந்திரா போலிசார் உதவியுடன் ஆட்டோ திருட்டில் ஈடுப்பட்ட அகிலா என்ற பெண்ணை கைது செய்தனர்.இவரது கூட்டாளியான அலமேலு மற்றும் கனகா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
பின்னர் அகிலாவிடம் போலிசார் நடத்திய விசாரணையில் அந்த கிராமத்தில் உள்ள அனைவருமே இது போன்று கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம் என்றும், மேலும் ஆட்டோவில் மூன்று குழுக்களாக பிரிந்து மூதாட்டியை மட்டும் குறிவைத்து கொள்ளையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதே போல் கடந்த 5 ஆண்டுகளாக கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டு வருவதாகவும்,இதே போன்று 4 மாநிலங்களில் ஈடுப்பட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறினார். பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து அகிலாவிடம் இருந்த 2 சவரன் நகை மற்றும் அவர் திருட்டில் ஈடுபட பயன்படுத்திய ஆட்டோவையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் இதனை தொடர்ந்து அகிலாவிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.