ETV Bharat / state

கத்திமுனையில் ஓட்டுநரை மிரட்டி ஆட்டோ பறிப்பு - 2 பேர் கைது

சென்னை: அம்பத்தூரில் கத்திமுனையில் ஓட்டுநரை மிரட்டி ஆட்டோ பறிப்பில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Jan 2, 2020, 7:17 AM IST

கத்திமுனையில் டிரைவரை மிரட்டி ஆட்டோ பறிப்பு
கத்திமுனையில் டிரைவரை மிரட்டி ஆட்டோ பறிப்பு

சென்னை அம்பத்தூர் எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முரளி(28). இவர் கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் சவாரிக்காக புறப்பட்டுச் சென்றார். இவர், அதே பகுதியில் உள்ள சக்தி நகர் சர்வீஸ் சாலை வழியாக சென்றுகொண்டிருந்தபோது இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இவரது ஆட்டோவை வழிமறித்துள்ளனர்.

பின்னர், அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி முரளியிடம் இருந்து ஆட்டோ மற்றும் அவரிடமிருந்த இரண்டாயிரத்து 500 ரூபாய் பணத்தையும் பறித்துக்கொண்டு மிரட்டி அனுப்பியுள்ளனர். இதையடுத்து, முரளி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கத்திமுனையில் டிரைவரை மிரட்டி ஆட்டோ பறிப்பு

அதனடிப்படையில் ஆய்வாளர் சிதம்பர முருகேசன் தலைமையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், முரளியை தாக்கி பணம் பறித்தது அதே பகுதியைச் சேர்ந்த குமுடி தினேஷ்(24), அவரது கூட்டாளி குமார்(31) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களைக் கைது செய்த காவல் துறையினர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: இந்த ஆட்டோ வீட்டுல இப்பவே குடியேறணும்னு இருக்கே!

சென்னை அம்பத்தூர் எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முரளி(28). இவர் கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் சவாரிக்காக புறப்பட்டுச் சென்றார். இவர், அதே பகுதியில் உள்ள சக்தி நகர் சர்வீஸ் சாலை வழியாக சென்றுகொண்டிருந்தபோது இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இவரது ஆட்டோவை வழிமறித்துள்ளனர்.

பின்னர், அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி முரளியிடம் இருந்து ஆட்டோ மற்றும் அவரிடமிருந்த இரண்டாயிரத்து 500 ரூபாய் பணத்தையும் பறித்துக்கொண்டு மிரட்டி அனுப்பியுள்ளனர். இதையடுத்து, முரளி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கத்திமுனையில் டிரைவரை மிரட்டி ஆட்டோ பறிப்பு

அதனடிப்படையில் ஆய்வாளர் சிதம்பர முருகேசன் தலைமையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், முரளியை தாக்கி பணம் பறித்தது அதே பகுதியைச் சேர்ந்த குமுடி தினேஷ்(24), அவரது கூட்டாளி குமார்(31) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களைக் கைது செய்த காவல் துறையினர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: இந்த ஆட்டோ வீட்டுல இப்பவே குடியேறணும்னு இருக்கே!

Intro:அம்பத்தூரில் கத்திமுனையில் டிரைவரை மிரட்டி ஆட்டோ பறிப்பில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.Body:அம்பத்தூரில் கத்திமுனையில் டிரைவரை மிரட்டி ஆட்டோ பறிப்பில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


அம்பத்தூர் கள்ளிக்குப்பம், மலர் நகர், எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் முரளி (28).இவர், ஆட்டோ டிரைவர். இதற்கிடையில் நேற்று அதிகாலை முரளி சவாரிக்காக ஆட்டோவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இவர், அதே பகுதி சக்தி நகர், சர்வீஸ் சாலை வழியாக ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது இரு மர்ம நபர்கள் இவரது ஆட்டோவை வழிமறித்து உள்ளனர். பின்னர், அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி முரளியிடம் இருந்து ஆட்டோ, ரூ.2500/- ஆகியவற்றை பறித்துக்கொண்டு மிரட்டி அனுப்பியுள்ளனர். இது குறித்து முரளி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன், எஸ்.ஐ வாணுவாமலை ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், முரளியை தாக்கி பணம் பறித்தது, அதே பகுதி சக்தி நகர், 3வது தெருவைச் சேர்ந்த குமுடி தினேஷ் (24), அவரது கூட்டாளி குமார் (31) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தலைமறைவாக இருக்கும் இடம் தெரிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடினர். இதையடுத்து அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். அப்போது தினேஷ் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது கீழே விழுந்து கை முறிந்தது. மேலும், அவரது கூட்டாளி குமாரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதன் பிறகு போலீசார் அவர்களை அம்பத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், தினேஷ் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. பின்னர், போலீசார் இருவரையும் கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிபதி உத்தரவின் பேரில் இருவரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.