ETV Bharat / state

வண்டலூர் உயிரியல் பூங்காவில் செயற்கை மழை - கோடை வெப்பத்தைத் தணிக்க புதிய முயற்சி

author img

By

Published : Apr 4, 2022, 10:03 PM IST

கோடைகால வெப்பத்தைத் தவிர்க்க, வண்டலூர் உயிரியல் பூங்காவில், வன விலங்குகளுக்கு செயற்கை மழை உள்ளிட்டப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Arignar Anna Zoological Park  vandalur zoo  summer precautions in vandalur zoo  artificial rain for animals at vandalur zoo  வண்டலூர் உயிரிழல் பூங்கா  வண்டலூர் உயிரிழல் பூங்காவில் செயற்கை மழை  கோடை வெப்பத்தை தனிக்க வண்டலூர் பூங்காவில் புதுய முயற்ச்சி
கோடை வெப்பத்தை தனிக்க புதுய முயற்ச்சி

சென்னை: அதிக வெப்பநிலை காரணமாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காக்களில் உள்ள வன விலங்குகள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. இதனால் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், அனைத்து விலங்குகளுக்கும் போதுமான நிழல் மற்றும் போதுமான நீர் வழங்கப்படுகின்றன. நேரடி சூரிய ஒளி ஊடுருவலைத் தடுக்க தேவையான இடங்களில் நிழல் வலை அமைக்கப்பட்டுள்ளது.

காண்டாமிருகம், யானை, நீர்யானை, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை போன்ற பெரிய தாவர உண்ணி விலங்குகளுக்குத் தண்ணீர் மழை மற்றும் தெளிப்பான்கள் மற்றும் மஞ்சோன் புல் ஓலைக் கொட்டகைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெப்பத்தில் இருந்து குளிர்விக்க, விலங்குகளுக்கு, ஒவ்வொரு நாளும் இரண்டு முறை குளத்தில் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.

Arignar Anna Zoological Park  vandalur zoo  summer precautions in vandalur zoo  artificial rain for animals at vandalur zoo  வண்டலூர் உயிரிழல் பூங்கா  வண்டலூர் உயிரிழல் பூங்காவில் செயற்கை மழை  கோடை வெப்பத்தை தனிக்க வண்டலூர் பூங்காவில் புதுய முயற்ச்சி
கோடை வெப்பத்தைத் தணிக்க புதிய முயற்சி

வெயில் படாமல் காத்தல்: குரங்கினங்கள், கரடிகள் மற்றும் யானைகளை குளிர்விக்க சிறப்பு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மான்களுக்கும் புதிய ஓலைக் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பறவை இருப்பிட அடைப்புகளின்மேல் மற்றும் பக்கவாட்டில் கோணிப் பைகள் கட்டப்பட்டு, பகலின் வெப்பமான நேரங்களில் குளிர்ந்த நீர் தெளிக்கப்படுகிறது. இதனால் இருப்பிடங்களில் வெப்பநிலை வெகுவாகக் குறைகிறது.

நெருப்புக்கோழிகள், நிலப்பறவைகள் வாழுமிடங்கள் மற்றும் நீர்ப்பறவை பறவைக் கூடங்களில் நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரடி சூரிய ஒளி ஊடுருவலைத் தடுக்க அயல்நாட்டுப் பறவைகள், நீர் மற்றும் நிலப்பறவைகள் இருப்பிடங்களில் நிழல் வலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோடை வெப்பத்தைத் தணிக்க புதிய முயற்சி

பனித்தூறல்: மாமிச உண்ணிகளுக்கு உறைந்த இறைச்சியும், குரங்கினங்கள் மற்றும் கரடிகளுக்கு ஐஸ் கட்டிகளில் உறைந்த பழங்களும் வழங்கப்படுகின்றன. மேலும் மான் இனங்களுக்கு கூடுதல் நீர் மற்றும் சிறப்பு உணவுகள் வழங்கப்படுகின்றன.

வெள்ளைப்புலி மற்றும் சிறுத்தை அடைப்புகளுக்குள் சூரிய ஒளியைத் துண்டிக்கும் நிழல் வலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக வெப்பம் இருந்தபோதிலும், வண்ணத்துப்பூச்சி, அதிக அளவில் வருகின்றன. இவற்றிற்காக பனித்தூறல் மற்றும் மூடுபனி அமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

தேன் மற்றும் விருந்தோம்பும் தாவரங்களுக்குப் போதுமான நிழல்வலை அமைக்கப்பட்டுள்ளது. பாம்பிற்காக, மண் மேடுகள் மற்றும் மண் பானைகள் பல அடுக்குகளில் வழங்கப்பட்டுள்ளன. பாம்புகளுக்கு செரிமானம், தோலுரித்தல் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கு வெவ்வேறான வெப்பநிலைகள் தேவைப்படுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தேயிலை தோட்டத்தில் 200 மீட்டர் தூரம் பறந்து வந்து விழுந்த கார்!

சென்னை: அதிக வெப்பநிலை காரணமாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காக்களில் உள்ள வன விலங்குகள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. இதனால் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், அனைத்து விலங்குகளுக்கும் போதுமான நிழல் மற்றும் போதுமான நீர் வழங்கப்படுகின்றன. நேரடி சூரிய ஒளி ஊடுருவலைத் தடுக்க தேவையான இடங்களில் நிழல் வலை அமைக்கப்பட்டுள்ளது.

காண்டாமிருகம், யானை, நீர்யானை, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை போன்ற பெரிய தாவர உண்ணி விலங்குகளுக்குத் தண்ணீர் மழை மற்றும் தெளிப்பான்கள் மற்றும் மஞ்சோன் புல் ஓலைக் கொட்டகைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெப்பத்தில் இருந்து குளிர்விக்க, விலங்குகளுக்கு, ஒவ்வொரு நாளும் இரண்டு முறை குளத்தில் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.

Arignar Anna Zoological Park  vandalur zoo  summer precautions in vandalur zoo  artificial rain for animals at vandalur zoo  வண்டலூர் உயிரிழல் பூங்கா  வண்டலூர் உயிரிழல் பூங்காவில் செயற்கை மழை  கோடை வெப்பத்தை தனிக்க வண்டலூர் பூங்காவில் புதுய முயற்ச்சி
கோடை வெப்பத்தைத் தணிக்க புதிய முயற்சி

வெயில் படாமல் காத்தல்: குரங்கினங்கள், கரடிகள் மற்றும் யானைகளை குளிர்விக்க சிறப்பு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மான்களுக்கும் புதிய ஓலைக் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பறவை இருப்பிட அடைப்புகளின்மேல் மற்றும் பக்கவாட்டில் கோணிப் பைகள் கட்டப்பட்டு, பகலின் வெப்பமான நேரங்களில் குளிர்ந்த நீர் தெளிக்கப்படுகிறது. இதனால் இருப்பிடங்களில் வெப்பநிலை வெகுவாகக் குறைகிறது.

நெருப்புக்கோழிகள், நிலப்பறவைகள் வாழுமிடங்கள் மற்றும் நீர்ப்பறவை பறவைக் கூடங்களில் நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரடி சூரிய ஒளி ஊடுருவலைத் தடுக்க அயல்நாட்டுப் பறவைகள், நீர் மற்றும் நிலப்பறவைகள் இருப்பிடங்களில் நிழல் வலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோடை வெப்பத்தைத் தணிக்க புதிய முயற்சி

பனித்தூறல்: மாமிச உண்ணிகளுக்கு உறைந்த இறைச்சியும், குரங்கினங்கள் மற்றும் கரடிகளுக்கு ஐஸ் கட்டிகளில் உறைந்த பழங்களும் வழங்கப்படுகின்றன. மேலும் மான் இனங்களுக்கு கூடுதல் நீர் மற்றும் சிறப்பு உணவுகள் வழங்கப்படுகின்றன.

வெள்ளைப்புலி மற்றும் சிறுத்தை அடைப்புகளுக்குள் சூரிய ஒளியைத் துண்டிக்கும் நிழல் வலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக வெப்பம் இருந்தபோதிலும், வண்ணத்துப்பூச்சி, அதிக அளவில் வருகின்றன. இவற்றிற்காக பனித்தூறல் மற்றும் மூடுபனி அமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

தேன் மற்றும் விருந்தோம்பும் தாவரங்களுக்குப் போதுமான நிழல்வலை அமைக்கப்பட்டுள்ளது. பாம்பிற்காக, மண் மேடுகள் மற்றும் மண் பானைகள் பல அடுக்குகளில் வழங்கப்பட்டுள்ளன. பாம்புகளுக்கு செரிமானம், தோலுரித்தல் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கு வெவ்வேறான வெப்பநிலைகள் தேவைப்படுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தேயிலை தோட்டத்தில் 200 மீட்டர் தூரம் பறந்து வந்து விழுந்த கார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.