- 1,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் 23.37 கோடி செலவில் வழங்கப்படும்.
- வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூபாய் 55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் வாங்கிட மானியம் வழங்கப்படும்.
- 10,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் மற்றும் முதுநிலை பட்ட மாணாக்கருக்கு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தேவையான பயிற்சிகள் ரூபாய் 10 கோடி செலவில் வழங்கப்படும்.
- 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ 2.50 கோடி செலவில் மதிப்புக் கூட்டப்பட்ட தொழில் திட்டங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.
- 200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க ரூபாய் 10 கோடி செலவில் மானியம் வழங்கப்படும்.
- பழுதடைந்துள்ள 10 ஆதிதிராவிடர் பள்ளி மாணாக்கர் விடுதிகளுக்கு ரூபாய் 45.45 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டடங்கள் கட்டப்படும்.
- வாடகை கட்டடங்களில் பழுதடைந்த கட்டடங்களில் இயங்கி வரும் 5 ஆதிதிராவிட மாணாக்கர் கல்லூரி விடுதிகளுக்கு ரூபாய் 28.35 கோடி செலவில் புதிய விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 6 மேல்நிலைப்பள்ளிகள் ரூபாய் 16.26 கோடி செலவில் மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
- 11 மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளின் ரூபாய் 17 கோடி மதிப்பீட்டில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
- 83 ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிகளுக்கு ரூபாய் 10.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.
- 500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 7.50 கோடி மதிப்பீட்டில் கறவை மாடுகள் வாங்கி ரூபாய் 2.25 கோடி மானியம் வழங்கப்படும்.
- 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூபாய் 90 லட்சம் மானியம் வழங்கப்படும்.
- 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைக்க ரூபாய் 45 லட்சம் மானியம் வழங்கப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
- 1,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தீவன புல் வளர்ப்பு கவிதைத் தொகுப்பு மற்றும் புல் கரணைகள் ரூபாய் 1 கோடி செலவில் வழங்கப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் ஆண்டு வருமான உச்சவரம்பு 3 லட்சமாக உயர்த்தப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான தொழில்நுட்ப பொருளாதார ஆய்வு மூலம் ரூபாய் 1.00 கோடி செலவில் திட்ட அறிக்கை வங்கி ஏற்படுத்தப்படும்.
- 7 மாவட்டங்களில் உள்ள 88 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு ரூபாய் 9.24 கோடி மதிப்பீட்டில் வைப்பு அரையுடன் கூடிய புதிய சமையல் அறைகள் கட்டப்படும்.
- 305 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு தேவையான அறைகலன்கள் மற்றும் தளவாட பொருட்கள் ரூபாய் 7.46 கோடி செலவில் வழங்கப்படும்.
- ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு ரூபாய் 5.70 கோடி செலவில் கழிவறை மற்றும் குளியல் அறைகள் கட்டப்படும்.
- 126 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூபாய் 3.15 கோடி மதிப்பீட்டில் ஆய்வு உபகரணங்கள் வழங்கப்படும்.
- ஏழு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி மாணாக்கர் விடுதிகள் 3.35 கோடி மதிப்பீட்டில் புதிதாக தொடங்கப்படும்.
- 5 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் கலை பாடப்பிரிவுகள் பொம்மை 1.68 கோடி மதிப்பீட்டில் புதிதாக தொடங்கப்படும்.
- 104 ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் 128 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கும் ரூபாய் 1.15 கோடி செலவில் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
- 13 மகாத்மா காந்தி தொழிலாளர்கள் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூபாய் 1.96 கோடி மதிப்பீட்டில் சுகாதார அங்காடிகள் அமைக்கப்படுவதற்கு ரூபாய் 98.00 லட்சம் மானியம் வழங்கப்படும்.
- பழங்குடியினர் வருவாய் ஈட்டும் பொருட்டு உன்னிகுச்சி மூலம் தளவாடப் பொருட்கள் தயாரிக்க ரூபாயை 1.80 கோடி செலவிடப்படும்.
- தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் மற்றும் பழங்குடியினர் நல வாரியம் ஆகிய வாரியங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் இதர நல வாரியங்களில் வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.
- 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணக்கர் விடுதிகளில் நூலகங்கள் மற்றும் இணைய வழியில் நூலகங்கள் ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி மாணக்கர் மற்றும் இளைஞர் களுக்கு நிதி சார்ந்த தொழில்களில் பயிற்சி ரூபாய் 50 லட்சம் செலவில் வழங்கப்படும்.
- 90 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளில் ரூபாய் 50 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணக்கர் விடுதிகளில் ஆண்டிற்கு 3 முறை மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும்.
- 20 ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகள் மற்றும் 2 பழங்குடியினர் நல கல்லூரி விடுதிகளில் ரூபாய் 15 லட்சம் செலவில் தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும்.
- அழிவின் விளிம்பில் உள்ள 6 பண்டைய பழங்குடியினரின் இனவரவியல் மற்றும் கலாச்சாரங்கள் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் ஒளி ஒலி ஆவணமாக பதிவு செய்யப்படும்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களுக்கு தனியாக விளையாட்டு மைதானம் கேட்ட ஓபிஎஸ்