ETV Bharat / state

அஞ்சப்பர் உணவகம் முன்பு வாலிபர் தீக்குளித்து தற்கொலை! - தீ குளித்து தற்கொலை

சென்னை: பிரபல உணவகங்களில் ஒன்றான அஞ்சப்பர் உணவகம் முன்பு வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

anjappar
author img

By

Published : Jul 6, 2019, 1:28 PM IST

கூடுவாஞ்சேரி கே.கே நகரில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தில் பணிபுரியும் சேலத்தைச் சேர்ந்த உதயசங்கர்(25) என்பவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ஊழியர் தி.நகரில் உள்ள அந்த உணவகத்தின் தலைமையகத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கும் அவரை தகாத வார்த்தைகளில் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த அவர், தலைமையகம் முன்பாக நேற்றிரவு உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பின்னர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கூடுவாஞ்சேரி கே.கே நகரில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தில் பணிபுரியும் சேலத்தைச் சேர்ந்த உதயசங்கர்(25) என்பவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ஊழியர் தி.நகரில் உள்ள அந்த உணவகத்தின் தலைமையகத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கும் அவரை தகாத வார்த்தைகளில் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த அவர், தலைமையகம் முன்பாக நேற்றிரவு உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பின்னர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Intro:Body:பிரபல தனியார் ஹோட்டலின் முன்பு வாலிபர் தீக்குளித்து பலி..

கூடுவாஞ்சேரி கே.கே நகரில் உள்ள அஞ்சப்பர் ஹோட்டலில் பணிபுரியும் சேலத்தை சேர்ந்த உதயசங்கர்(25) என்பவருக்கு கடந்த இரண்டு மாதமாக சம்பளப் பணம் தரவில்லை.

இதனால் விரக்தி அடைந்த அந்த ஊழியர் தி நகரில் உள்ள அஞ்சப்பர் ஹோட்டல் தலைமையகம் வந்துள்ளார். அங்கு அவரை தகாத வார்த்தைகளில் திட்டியதாக தெரிகிறது.

இதனால் தலைமையகம் முன்பாக நேற்று இரவு உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இது குறித்து பாண்டிபஜார் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இதே போல் இரண்டு வாரங்களுக்கு முன்பு தாம்பரம் அஞ்சப்பர் ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர் சுந்தர பாண்டியன் என்பவர் ரூபாய் 18 லட்சம் பணத்தை எடுத்து சென்றதாக அஞ்சப்பர் நிர்வாகம் அந்த ஊழியரை தி நகரில் உள்ள தலைமையகத்துக்கு வரச்சொல்லி கடுமையாகத் தாக்கியது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.