ETV Bharat / state

'ஜெயலலிதா சமாதிக்கு நடந்துகூட செல்லாத தினகரன்' - விளாசி தள்ளிய புகழேந்தி!

author img

By

Published : Dec 5, 2019, 10:55 PM IST

Updated : Dec 5, 2019, 11:10 PM IST

சென்னை: ஜெயலலிதாவின் நினைவுநாளில் அவருடைய சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தாத டிடிவி தினகரனை, அமமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி சரமாரியாக விமர்சித்துள்ளார்.

AMMK Pugazhendhi condemned about TTV Dinakaran not going to jayalalitha's grave
AMMK Pugazhendhi condemned about TTV Dinakaran not going to jayalalitha's grave

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை இன்று நாம் கடைபிடித்து வருகிறோம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியவர் ஜெயலலிதா. சர்தார் வல்லபாய் பட்டேலுக்குப் பிறகு அதிக புத்தகங்களைப் படித்தவர் ஜெயலலிதா. அவரைப் பற்றி சொல்வதற்கு காலமும் நேரமும் பத்தாது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஜெயலலிதாவின் பெயரில் அமமுக என்ற கம்பெனியை டிடிவி தினகரன் நடத்தி வருகிறார். கொடியில் ஜெயலலிதாவின் படம் போட்டு அக்கம்பெனியை நடத்துகிறார். இன்று ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி, அவரின் நினைவிடத்திற்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் நடந்து சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் தினகரனோ வாகனத்தில் சென்று கையை மட்டும் அசைத்துவிட்டுச் சென்றார்.

புகழேந்தி பேட்டி

அவரால் நடந்து சென்று கூட அஞ்சலி செலுத்த முடியவில்லை. அவர் என்ன வானத்திலிருந்து குதித்து விட்டாரா? குறைந்து போய்விடுவாரா?” என்று கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: "தான் அதிமுகவில் இணைய முதலமைச்சரும் துணைமுதலமைச்சரும் தான் முட்டுக்கட்டை" - ஜெ. தீபா குற்றச்சாட்டு

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை இன்று நாம் கடைபிடித்து வருகிறோம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியவர் ஜெயலலிதா. சர்தார் வல்லபாய் பட்டேலுக்குப் பிறகு அதிக புத்தகங்களைப் படித்தவர் ஜெயலலிதா. அவரைப் பற்றி சொல்வதற்கு காலமும் நேரமும் பத்தாது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஜெயலலிதாவின் பெயரில் அமமுக என்ற கம்பெனியை டிடிவி தினகரன் நடத்தி வருகிறார். கொடியில் ஜெயலலிதாவின் படம் போட்டு அக்கம்பெனியை நடத்துகிறார். இன்று ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி, அவரின் நினைவிடத்திற்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் நடந்து சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் தினகரனோ வாகனத்தில் சென்று கையை மட்டும் அசைத்துவிட்டுச் சென்றார்.

புகழேந்தி பேட்டி

அவரால் நடந்து சென்று கூட அஞ்சலி செலுத்த முடியவில்லை. அவர் என்ன வானத்திலிருந்து குதித்து விட்டாரா? குறைந்து போய்விடுவாரா?” என்று கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: "தான் அதிமுகவில் இணைய முதலமைச்சரும் துணைமுதலமைச்சரும் தான் முட்டுக்கட்டை" - ஜெ. தீபா குற்றச்சாட்டு

Intro:அதிமுக முன்னால் செய்தி தொடர்பாளர் புகழேந்தி சென்னை விமான நிலையத்தில் பேட்டிBody:அதிமுக முன்னால் செய்தி தொடர்பாளர் புகழேந்தி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை நாம் கடைபிடித்து வருகிறோம்

சட்ட ஒழுங்கை நிலை நாட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கு பிறகு அதிகம் புத்தகங்களைப் படைத்தவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா

ஜெயலலிதா அவர்களின் வழியில் இந்த அரசு நல்ல திட்டங்களை செயல்படுத்தி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளை திமுக, காங்கிரஸிடம் இருந்து மீட்டெடுத்து உள்ளோம் இந்தப் பெருமை முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் சாரும் என தெரிவித்தார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி சொல்வதற்கு காலமும் நேரமும் பத்தாது எனக்கு கூறினார்

ஜெயலலிதாவின் பெயரில் அமமுக என்று தினகரன் ஒரு கம்பெனியை நடத்தி வருகிறார். கொடியில் ஜெயலலிதாவின் படம் போட்டு கம்பெனி நடத்தி வருகிறார்.

இன்று ஜெயலலிதாவின் நினைவு நாளை ஒட்டி அவரின் நினைவிடத்திற்கு முதல்வரும் துணை முதல்வரும் அமைச்சர் பெருமக்களும் நடந்து சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஆனால் தினகரன் வாகனத்தில் சென்று கையை மட்டும் அசைத்துவிட்டு சென்றார் அவரால் நடந்து சென்று கூட அஞ்சலி செலுத்த முடியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலின் பொழுது மக்களிடம் உள்ளாட்சித் தேர்தலை எடப்பாடி பழனிசாமி நடத்த மாட்டார். திமுக ஆட்சிக்கு வந்து தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் என கூறினார். ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்த பின்னர் தேர்தலை சந்திக்காமல் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இதனால் திமுக உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்கு தயங்குகிறது என கூறினார்

நடிகர் ரஜினிகாந்த் எனது நண்பர் ஆனால் அவர் தேவையில்லாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக வருவார் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார் அதிசயம் நடந்துள்ளது என தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேருந்து நடத்துனராக இருந்த சிவாஜி ராவ் என்பவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வருவார் என்று எதிர்பார்த்து இருப்பாரா என கேள்வி எழுப்பினார்

தடுமாற்றமான தமிழ் அழகு இல்லாத உருவம் இல்லாத அவர் உச்சத்திற்கு வந்த வந்தபோது

சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக ஆனதில் என்ன அதிசயம் இருக்கிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்

வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தொடரும் அப்போதும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராக இருப்பார். ஆனால் ரஜினிகாந்த் அவர்கள் அப்பொழுதும் கட்சி ஆரம்பிக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பார் என தெரிவித்தார்Conclusion:
Last Updated : Dec 5, 2019, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.