ETV Bharat / state

சென்னை விமான நிலையத்திற்கு ஏர்போர்ட் கார்பன் அங்கீகார தரச்சான்றிதழ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 5:20 PM IST

chennai airport: சென்னை விமானநிலையத்தில் குறைந்த அளவு கார்பன் மாசு ஏற்படுவதால் சர்வதேச விமான நிலைய கவுன்சில் ஏர்போர்ட் கார்பன் (Airport Carbon Accreditation) அங்கீகார சான்றிதழை வழங்கி உள்ளது.

Airport Carbon Accreditation
சென்னை விமான நிலையத்திற்கு ஏர்போர்ட் கார்பன் அங்கீகார தரச்சான்றிதழ்

சென்னை: மீனம்பாக்கத்தில் சர்வதேச பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தை இயக்குவதற்கு ஒவ்வொரு மாதத்திற்கும் 63.92 லட்சம் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த மின்சாரம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் பசுமை எரிசக்தியாக சோலார் மற்றும் காற்றாலை மூலம் கிடைக்கும் புதுப்பிக்கத்தக்கதாக எரிசக்தியாக மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்சாரத்தில் கார்பன் டை ஆக்சைடு வெளிப்படும் அளவு மிகவும் குறைவாக இருக்கும்.

சென்னை விமான நிலையத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தில் 59 சதவீத மின்சாரம் வெளி நிறுவனங்களிடம் இருந்து சூரிய ஒளி மின்சக்தியாக வாங்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி அலகு மூலம் 3 சதவீதம் மின்சாரம் கிடைக்கிறது.

இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து பசுமை மின்கட்டண திட்டத்தின் கீழ் 38 சதவீதம் புதுப்பிக்கத்த எரிசக்தி வாங்கப்படுகிறது. இதைப்போல் சென்னை விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் நூறு சதவீத மின்சாரமும், கார்பன் டை ஆக்சைடு பாதிப்பு இல்லாத பசுமை எரிசக்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.

சென்னை விமான நிலைய முனையங்கள் முழுதும் 100 சதவீதம் எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்திற்கு, தேவையான 100 சதவீத மின்சாரமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து விமான நிலையத்தில் கார்பன் மாசு என்பது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக சர்வதேச விமான நிலைய கவுன்சில் ஏ.சி.ஏ (ACA) எனப்படும் ஏர்போர்ட் கார்பன் (Airport Carbon Accreditation) அங்கீகாரம் என்ற சான்றிதழை வழங்கி உள்ளது.

மேலும், பசுமை எரிசக்தி பயன்படுவதன் காரணமாக எரிசக்தி மேலாண்மை அமைப்பின் கீழ் ஐ.எஸ்.ஓ. 50001 – 2018 (ISO 50001-2018)சான்றிதழும் சென்னை விமான நிலையத்திற்கு கிடைத்துள்ளது என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னை சர்வேத விமானநிலையம் வாயிலாக நாள் ஒன்றுக்குப் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்கின்றனர். ஆண்டுக்கு 2 கோடிக்கு மேற்பட்ட பயணியர் விமானநிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க:5 நாட்கள் சூறாவளி பயணம்.. அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிக்கை.. இளைஞர் அணியினர் உற்சாகம்!

சென்னை: மீனம்பாக்கத்தில் சர்வதேச பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தை இயக்குவதற்கு ஒவ்வொரு மாதத்திற்கும் 63.92 லட்சம் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த மின்சாரம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் பசுமை எரிசக்தியாக சோலார் மற்றும் காற்றாலை மூலம் கிடைக்கும் புதுப்பிக்கத்தக்கதாக எரிசக்தியாக மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்சாரத்தில் கார்பன் டை ஆக்சைடு வெளிப்படும் அளவு மிகவும் குறைவாக இருக்கும்.

சென்னை விமான நிலையத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தில் 59 சதவீத மின்சாரம் வெளி நிறுவனங்களிடம் இருந்து சூரிய ஒளி மின்சக்தியாக வாங்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி அலகு மூலம் 3 சதவீதம் மின்சாரம் கிடைக்கிறது.

இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து பசுமை மின்கட்டண திட்டத்தின் கீழ் 38 சதவீதம் புதுப்பிக்கத்த எரிசக்தி வாங்கப்படுகிறது. இதைப்போல் சென்னை விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் நூறு சதவீத மின்சாரமும், கார்பன் டை ஆக்சைடு பாதிப்பு இல்லாத பசுமை எரிசக்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.

சென்னை விமான நிலைய முனையங்கள் முழுதும் 100 சதவீதம் எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்திற்கு, தேவையான 100 சதவீத மின்சாரமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து விமான நிலையத்தில் கார்பன் மாசு என்பது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக சர்வதேச விமான நிலைய கவுன்சில் ஏ.சி.ஏ (ACA) எனப்படும் ஏர்போர்ட் கார்பன் (Airport Carbon Accreditation) அங்கீகாரம் என்ற சான்றிதழை வழங்கி உள்ளது.

மேலும், பசுமை எரிசக்தி பயன்படுவதன் காரணமாக எரிசக்தி மேலாண்மை அமைப்பின் கீழ் ஐ.எஸ்.ஓ. 50001 – 2018 (ISO 50001-2018)சான்றிதழும் சென்னை விமான நிலையத்திற்கு கிடைத்துள்ளது என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னை சர்வேத விமானநிலையம் வாயிலாக நாள் ஒன்றுக்குப் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்கின்றனர். ஆண்டுக்கு 2 கோடிக்கு மேற்பட்ட பயணியர் விமானநிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க:5 நாட்கள் சூறாவளி பயணம்.. அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிக்கை.. இளைஞர் அணியினர் உற்சாகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.