ETV Bharat / state

“போலி விவசாயி” வேடத்தை “ரிப்பீட்” செய்ய வேண்டாம் - எடப்பாடிக்கு எம்ஆர்கே. பன்னீர்செல்வத்தின் அன்பு வேண்டுகோள்..

author img

By

Published : Mar 21, 2022, 9:36 AM IST

Updated : Mar 21, 2022, 10:16 AM IST

உழவர்களே, மக்களே பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையைக் கொச்சைப்படுத்தி - ஆளுங்கட்சியாக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி போட்ட “போலி விவசாயி”, “போலி பச்சைத் துண்டு” வேடத்தை “ரிப்பீட்” செய்ய வேண்டாம் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

“போலி விவசாயி” வேடத்தை “ரிப்பீட்” செய்ய வேண்டாம் - எடப்பாடிக்கு பன்னீர்செல்வத்தின் அன்பு வேண்டுகோள்..
“போலி விவசாயி” வேடத்தை “ரிப்பீட்” செய்ய வேண்டாம் - எடப்பாடிக்கு பன்னீர்செல்வத்தின் அன்பு வேண்டுகோள்..

சென்னை: வேளாண்துறைக்கென சட்டப்பேரவையில் 2வது முறையாக தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை (தனி பட்ஜெட்) அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (மார்ச்.19) தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு மொத்தமாக ரூ.33,007 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வேளாண்துறைக்கு ரூ.32,775.78 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம்

இதனையடுத்து, வேளாண் பட்ஜெட் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "இது வேளாண் பட்ஜெட் அல்ல, வேளாண் மானிய கோரிக்கை தான். கொள்கை விளக்கத்தில் உள்ளதை தான் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் இல்லை. விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது" என குற்றஞ்சாட்டினார்.

மேலும், பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில், "திமுக விடியா அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்று வெத்து வேட்டு மற்றும் "வார்த்தை ஜால தோரணங்களால் அமைக்கப்பட்ட வாய்பந்தல்" ஆகும், மக்கள் நலனில் உண்மையில் அக்கறை கொண்ட யாராலும் இந்த மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கையை வரவேற்க முடியாது.

முதலமைச்சர் தொலைநோக்குப் பார்வையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை
முதலமைச்சர் தொலைநோக்குப் பார்வையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை

குடிமராமத்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் போன்ற திட்டங்களால் அதிமுகவின் ஆட்சி விவசாயிகளின் பொற்காலமாக திகழ்ந்தது, ஆனால் திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட் எந்த ஒரு பெரிய திட்டமும் இல்லாமல் கண்துடைப்பாக காற்றடைத்த பலூன் ஆக உள்ளது. இந்த வேளாண் பட்ஜெட் மக்களை ஏமாற்றும் பட்ஜெட்" என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் ஓடோடிச் சென்று உதவுகிறார்

இதுதொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடே போற்றும் தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையையும், உழவர்கள் அனைவரும் பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையையும்” பார்த்து, உழவர்களை வஞ்சித்து ஆட்சி செய்துவிட்டு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது.

அதனால் தானோ என்னவோ “திமுக ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு” என்று ஒரு பச்சைப் பொய்யை அறிக்கையாக - பேட்டியாக கொடுத்திருக்கிறார். அதற்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக ஆட்சியில் உழவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் தமிழ்நாடு முதலமைச்சர் ஓடோடிச் சென்று உதவுகிறார். விவசாயிகளை பாதிக்கக்கூடிய பிரச்சனைகளை ஏற்க முதலமைச்சர் மறுத்து வருகிறார்.

உழவர்களுக்கு முதலமைச்சர் ஓடோடிச் சென்று உதவுகிறார்
உழவர்களுக்கு முதலமைச்சர் ஓடோடிச் சென்று உதவுகிறார்

தாங்கிக் கொள்ள முடியவில்லை

உழவர்களுக்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கைகளிலும்- வேளாண் துறைக்குப் பல்வேறு திட்டங்களை அறிவித்து- வேளாண் உட்கட்டமைப்பு, உற்பத்தி, விளைபொருட்களுக்கு ஏற்ற விலை என அனைத்திலும் முன்னுதாரணமாக விளங்கும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். சென்ற வேளாண் நிதிநிலை அறிக்கையில் அளித்த அறிவிப்புகளை- இந்த வேளாண் நிதி நிலை அறிக்கைக்குள் நிறைவேற்றியுள்ளது திமுக அரசு.

நாடே போற்றும் தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை
நாடே போற்றும் தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை

நிறைவேற்றியவர் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். எங்கள் முதலமைச்சரின் வழிகாட்டுதலில் வெளியாகியுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை - உழவர்களின் எதிர்காலம்! வேளாண் தொழிலின் பொற்காலம்!அதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை

ஆகவே தான், அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்து ஏதும் அறியாமல் - உட்கட்சியில் என்றைக்கு நமது பதவி போகும்- எத்தனை பேர் நம் பதவிக்கு குறி வைக்கிறார்கள் என்ற தாங்க முடியாத கவலையில் “தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு” என்றும் “வேளாண் பட்ஜெட்டுக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை” என்றெல்லாம் அரைவேக்காட்டுத்தனமாக, ஒரு முதலமைச்சராக இருந்தவர்- இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அறிக்கை விடுவதும்- பேட்டியளிப்பதும் கேலிக்கூத்தாக இருக்கிறது.

உழவர்களே, மக்களே பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கை
உழவர்களே, மக்களே பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கை

ஆட்சி நிர்வாகம் இவர் முதலமைச்சராக இருந்தபோது எப்படித் திண்டாடியிருக்கும் என்பது இன்னும் தெளிவாகப் புரிகிறது! உழவர்கள் தற்கொலை, உழவர்களின் “கிசான் இன்சூரன்ஸ்” திட்டத்தில் முறைகேடு, உழவர்கள் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்திற்கே சென்று தடையுத்தரவு வாங்கியது.

அராஜக ஆட்சியை நடத்திய பழனிசாமி

உழவர்களை வஞ்சிக்கும்- உழவுத் தொழிலை அடியோடு பாதிக்கும் ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்து- வாக்களித்து- வக்காலத்து வாங்கியது- மேட்டூர் அணையைத் திறந்துவிட்டு விட்டு, பிறகு தூர்வாருகிறோம் என்று “முறைகேடு”, குடிமராமத்து ஊழல்- இப்படி உழவர்களின் நாடி நரம்புகளில் சம்மட்டி எடுத்து அடிக்கும் வகையில் ஒரு அராஜக ஆட்சியை நடத்திய பழனிசாமி, “தனது உழவர் விரோத ஆட்சியை விவசாயிகளின் பொற்காலம்” என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பொய் சொல்கிறார் என்றால்- பொய் சொல்வதில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு நிகர் அவரேதான் என்பதில் சந்தேகமில்லை.

“போலி விவசாயி” வேடத்தை “ரிப்பீட்” செய்ய வேண்டாம்
“போலி விவசாயி” வேடத்தை “ரிப்பீட்” செய்ய வேண்டாம்

போலி பச்சைத் துண்டு

ஆகவே அனைவரும் பாராட்டும் தமிழ்நாடு முதலமைச்சர் தொலைநோக்குப் பார்வையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பாராட்ட மனமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கலாம். ஆனால், இன்று திமுக அரசு அளித்துள்ள- உழவர் பெருங்குடி மக்களே பாராட்டும் வேளாண் நிதி நிலை அறிக்கையைக் கொச்சைப்படுத்தி- ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்த போது போட்ட “போலி விவசாயி”, “போலி பச்சைத் துண்டு” வேடத்தை “ரிப்பீட்” செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது உழவர்களின் அரசு- ஆகவே பழனிசாமி இதுபோன்ற பகல் வேடங்கள் போட்டு- அரசியலில் மேலும் “காற்று போன பலூன்” ஆகி விட வேண்டாம் என்ற அறிவுறுத்த விரும்புகிறேன்" என அதில் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (மார்ச்.21) தொடங்குகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு நிதி மற்றும் வேளாண் துறை அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர்.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் திமுக அலட்சியம் காட்டுகிறது - ஓபிஎஸ்

சென்னை: வேளாண்துறைக்கென சட்டப்பேரவையில் 2வது முறையாக தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை (தனி பட்ஜெட்) அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (மார்ச்.19) தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு மொத்தமாக ரூ.33,007 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வேளாண்துறைக்கு ரூ.32,775.78 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம்

இதனையடுத்து, வேளாண் பட்ஜெட் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "இது வேளாண் பட்ஜெட் அல்ல, வேளாண் மானிய கோரிக்கை தான். கொள்கை விளக்கத்தில் உள்ளதை தான் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் இல்லை. விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது" என குற்றஞ்சாட்டினார்.

மேலும், பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில், "திமுக விடியா அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்று வெத்து வேட்டு மற்றும் "வார்த்தை ஜால தோரணங்களால் அமைக்கப்பட்ட வாய்பந்தல்" ஆகும், மக்கள் நலனில் உண்மையில் அக்கறை கொண்ட யாராலும் இந்த மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கையை வரவேற்க முடியாது.

முதலமைச்சர் தொலைநோக்குப் பார்வையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை
முதலமைச்சர் தொலைநோக்குப் பார்வையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை

குடிமராமத்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் போன்ற திட்டங்களால் அதிமுகவின் ஆட்சி விவசாயிகளின் பொற்காலமாக திகழ்ந்தது, ஆனால் திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட் எந்த ஒரு பெரிய திட்டமும் இல்லாமல் கண்துடைப்பாக காற்றடைத்த பலூன் ஆக உள்ளது. இந்த வேளாண் பட்ஜெட் மக்களை ஏமாற்றும் பட்ஜெட்" என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் ஓடோடிச் சென்று உதவுகிறார்

இதுதொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடே போற்றும் தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையையும், உழவர்கள் அனைவரும் பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையையும்” பார்த்து, உழவர்களை வஞ்சித்து ஆட்சி செய்துவிட்டு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது.

அதனால் தானோ என்னவோ “திமுக ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு” என்று ஒரு பச்சைப் பொய்யை அறிக்கையாக - பேட்டியாக கொடுத்திருக்கிறார். அதற்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக ஆட்சியில் உழவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் தமிழ்நாடு முதலமைச்சர் ஓடோடிச் சென்று உதவுகிறார். விவசாயிகளை பாதிக்கக்கூடிய பிரச்சனைகளை ஏற்க முதலமைச்சர் மறுத்து வருகிறார்.

உழவர்களுக்கு முதலமைச்சர் ஓடோடிச் சென்று உதவுகிறார்
உழவர்களுக்கு முதலமைச்சர் ஓடோடிச் சென்று உதவுகிறார்

தாங்கிக் கொள்ள முடியவில்லை

உழவர்களுக்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கைகளிலும்- வேளாண் துறைக்குப் பல்வேறு திட்டங்களை அறிவித்து- வேளாண் உட்கட்டமைப்பு, உற்பத்தி, விளைபொருட்களுக்கு ஏற்ற விலை என அனைத்திலும் முன்னுதாரணமாக விளங்கும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். சென்ற வேளாண் நிதிநிலை அறிக்கையில் அளித்த அறிவிப்புகளை- இந்த வேளாண் நிதி நிலை அறிக்கைக்குள் நிறைவேற்றியுள்ளது திமுக அரசு.

நாடே போற்றும் தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை
நாடே போற்றும் தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை

நிறைவேற்றியவர் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். எங்கள் முதலமைச்சரின் வழிகாட்டுதலில் வெளியாகியுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை - உழவர்களின் எதிர்காலம்! வேளாண் தொழிலின் பொற்காலம்!அதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை

ஆகவே தான், அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்து ஏதும் அறியாமல் - உட்கட்சியில் என்றைக்கு நமது பதவி போகும்- எத்தனை பேர் நம் பதவிக்கு குறி வைக்கிறார்கள் என்ற தாங்க முடியாத கவலையில் “தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு” என்றும் “வேளாண் பட்ஜெட்டுக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை” என்றெல்லாம் அரைவேக்காட்டுத்தனமாக, ஒரு முதலமைச்சராக இருந்தவர்- இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அறிக்கை விடுவதும்- பேட்டியளிப்பதும் கேலிக்கூத்தாக இருக்கிறது.

உழவர்களே, மக்களே பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கை
உழவர்களே, மக்களே பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கை

ஆட்சி நிர்வாகம் இவர் முதலமைச்சராக இருந்தபோது எப்படித் திண்டாடியிருக்கும் என்பது இன்னும் தெளிவாகப் புரிகிறது! உழவர்கள் தற்கொலை, உழவர்களின் “கிசான் இன்சூரன்ஸ்” திட்டத்தில் முறைகேடு, உழவர்கள் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்திற்கே சென்று தடையுத்தரவு வாங்கியது.

அராஜக ஆட்சியை நடத்திய பழனிசாமி

உழவர்களை வஞ்சிக்கும்- உழவுத் தொழிலை அடியோடு பாதிக்கும் ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்து- வாக்களித்து- வக்காலத்து வாங்கியது- மேட்டூர் அணையைத் திறந்துவிட்டு விட்டு, பிறகு தூர்வாருகிறோம் என்று “முறைகேடு”, குடிமராமத்து ஊழல்- இப்படி உழவர்களின் நாடி நரம்புகளில் சம்மட்டி எடுத்து அடிக்கும் வகையில் ஒரு அராஜக ஆட்சியை நடத்திய பழனிசாமி, “தனது உழவர் விரோத ஆட்சியை விவசாயிகளின் பொற்காலம்” என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பொய் சொல்கிறார் என்றால்- பொய் சொல்வதில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு நிகர் அவரேதான் என்பதில் சந்தேகமில்லை.

“போலி விவசாயி” வேடத்தை “ரிப்பீட்” செய்ய வேண்டாம்
“போலி விவசாயி” வேடத்தை “ரிப்பீட்” செய்ய வேண்டாம்

போலி பச்சைத் துண்டு

ஆகவே அனைவரும் பாராட்டும் தமிழ்நாடு முதலமைச்சர் தொலைநோக்குப் பார்வையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பாராட்ட மனமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கலாம். ஆனால், இன்று திமுக அரசு அளித்துள்ள- உழவர் பெருங்குடி மக்களே பாராட்டும் வேளாண் நிதி நிலை அறிக்கையைக் கொச்சைப்படுத்தி- ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்த போது போட்ட “போலி விவசாயி”, “போலி பச்சைத் துண்டு” வேடத்தை “ரிப்பீட்” செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது உழவர்களின் அரசு- ஆகவே பழனிசாமி இதுபோன்ற பகல் வேடங்கள் போட்டு- அரசியலில் மேலும் “காற்று போன பலூன்” ஆகி விட வேண்டாம் என்ற அறிவுறுத்த விரும்புகிறேன்" என அதில் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (மார்ச்.21) தொடங்குகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு நிதி மற்றும் வேளாண் துறை அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர்.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் திமுக அலட்சியம் காட்டுகிறது - ஓபிஎஸ்

Last Updated : Mar 21, 2022, 10:16 AM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.