ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சஸ்பெண்ட்?

author img

By

Published : Nov 16, 2020, 10:46 AM IST

Updated : Nov 16, 2020, 11:37 AM IST

சென்னை: ஊழல் புகாரைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பணியிடை நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளாக, தகவல் வெளியாகியுள்ளது.

Anna university vc surappa suspend
Anna university vc surappa suspend

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து நவம்பர் 11ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

அதில், அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் நடைபெற்ற தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் துணை வேந்தர் சூரப்பா, ஆசிரியர் சங்கத் தலைவர் சக்திநாதன் ஆகியோர் சுமார் ரூ. 80 கோடிவரை லஞ்சம் பெற்றுள்ளனர். மேலும், தேர்வுத்துறையில் பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக வரதராஜன் என்பவர் சூரப்பா மீது புகார் அளித்துள்ளார். அதேபோல், அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவரது மகள் மூலம் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளுக்கு இயந்திரங்களை கொள்முதல் செய்துள்ளதாகவும், அரியர் விவகாரம், சிறப்பு அந்தஸ்து போன்ற விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகமே நிதி திரட்டும் என்று மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியது போன்றவற்றில் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது

இது குறித்து ஓய்வு உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் விசாரணையை தொடங்க உள்ளேன். புதிய அலுவலகத்தில் இன்று (நவம்பர் 16) பொறுப்பேற்க திட்டமிட்டுள்ளேன். அதன் பிறகு புகார்தாரர்கள், துணைவேந்தர், பதிவாளர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், மூத்த பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும்" என்றார்.


இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியப் பின்னர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே ஊழல் புகாரில் சிக்கிய துணைவேந்தர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னரே , அவர்கள் மீதான விசாரணை நடைபெற்றது. அந்ந வகையில் சூரப்பாவும் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து நவம்பர் 11ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

அதில், அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் நடைபெற்ற தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் துணை வேந்தர் சூரப்பா, ஆசிரியர் சங்கத் தலைவர் சக்திநாதன் ஆகியோர் சுமார் ரூ. 80 கோடிவரை லஞ்சம் பெற்றுள்ளனர். மேலும், தேர்வுத்துறையில் பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக வரதராஜன் என்பவர் சூரப்பா மீது புகார் அளித்துள்ளார். அதேபோல், அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவரது மகள் மூலம் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளுக்கு இயந்திரங்களை கொள்முதல் செய்துள்ளதாகவும், அரியர் விவகாரம், சிறப்பு அந்தஸ்து போன்ற விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகமே நிதி திரட்டும் என்று மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியது போன்றவற்றில் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது

இது குறித்து ஓய்வு உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் விசாரணையை தொடங்க உள்ளேன். புதிய அலுவலகத்தில் இன்று (நவம்பர் 16) பொறுப்பேற்க திட்டமிட்டுள்ளேன். அதன் பிறகு புகார்தாரர்கள், துணைவேந்தர், பதிவாளர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், மூத்த பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும்" என்றார்.


இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியப் பின்னர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே ஊழல் புகாரில் சிக்கிய துணைவேந்தர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னரே , அவர்கள் மீதான விசாரணை நடைபெற்றது. அந்ந வகையில் சூரப்பாவும் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:

'அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை இடைநீக்கம் செய்ய வேண்டும்'

Last Updated : Nov 16, 2020, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.