ETV Bharat / state

சசிகலாவை சந்தித்தால் உடனடி நீக்கம் - அதிமுக கூட்டத்தில் முடிவு!

author img

By

Published : Feb 6, 2021, 9:56 PM IST

சென்னை: பெங்களூருவில் இருந்து சென்னை வரும் சசிகலாவை சந்திப்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு உடனடியாக நீக்கப்படுவார்கள் என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

admk meeting
admk meeting

பெங்களூருவில் இருந்து நாளை மறுநாள் (பிப்.8) சசிகலா சென்னை வருகிறார். இதற்காக அமமுகவினர் சிறப்பு வரவேற்பு அளிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தச்சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் உடன் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சசிகலா வருகை குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் இரண்டு முறை புகார் அளித்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கூட்டத்தில் சசிகலா வருகை குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டாலும், ஆலோசனைக்குப் பிறகு அக்கட்சி சார்பாக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "அதிமுக அரசின் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை துண்டு பிரசுரங்கள், மூலம் மக்களிடம் எடுத்துச் செல்வது மற்றும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், "திமுகவுக்கு இனி தேய்பிறை தான். 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் நல்லாட்சி தொடர்வதற்கான ஆலோசனைகள் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், "சசிகலாவை சந்திப்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். சசிகலா குறித்து எதுவும் பேசப்படவில்லை; யாருக்கும் அஞ்சக்கூடாது. கட்சியின் துரோகிகளாகவும், எதிரிகளாகவும் இருக்கக்கூடியவர்களை யார் சந்தித்தாலும் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்" என்றார்.

சசிகலா குறித்த கேள்விக்கு எந்த அமைச்சரும் பதிலளிக்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு!

பெங்களூருவில் இருந்து நாளை மறுநாள் (பிப்.8) சசிகலா சென்னை வருகிறார். இதற்காக அமமுகவினர் சிறப்பு வரவேற்பு அளிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தச்சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் உடன் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சசிகலா வருகை குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் இரண்டு முறை புகார் அளித்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கூட்டத்தில் சசிகலா வருகை குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டாலும், ஆலோசனைக்குப் பிறகு அக்கட்சி சார்பாக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "அதிமுக அரசின் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை துண்டு பிரசுரங்கள், மூலம் மக்களிடம் எடுத்துச் செல்வது மற்றும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், "திமுகவுக்கு இனி தேய்பிறை தான். 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் நல்லாட்சி தொடர்வதற்கான ஆலோசனைகள் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், "சசிகலாவை சந்திப்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். சசிகலா குறித்து எதுவும் பேசப்படவில்லை; யாருக்கும் அஞ்சக்கூடாது. கட்சியின் துரோகிகளாகவும், எதிரிகளாகவும் இருக்கக்கூடியவர்களை யார் சந்தித்தாலும் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்" என்றார்.

சசிகலா குறித்த கேள்விக்கு எந்த அமைச்சரும் பதிலளிக்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.