ETV Bharat / state

தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பு நடத்த தடை விதிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு - etv bharat

தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பு
தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பு
author img

By

Published : Aug 7, 2021, 4:53 PM IST

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்த தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தொலைதூரக்கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, இந்திய பார் கவுன்சில் அங்கிகாரம் இல்லாமல் தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

தொலைதூர கல்வியில் சட்டப்படிப்புக்கான வகுப்புகளை நடத்த அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு உரிமையோ? அதிகாரமோ? இல்லை என இந்திய பார் கவுன்சில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தலைமை நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை, ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: தென்னிந்தியாவில் கட்டமைப்பு வசதிகளில் கோவை ரயில் நிலையம் முதலிடம்!

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்த தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தொலைதூரக்கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, இந்திய பார் கவுன்சில் அங்கிகாரம் இல்லாமல் தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

தொலைதூர கல்வியில் சட்டப்படிப்புக்கான வகுப்புகளை நடத்த அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு உரிமையோ? அதிகாரமோ? இல்லை என இந்திய பார் கவுன்சில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தலைமை நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை, ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: தென்னிந்தியாவில் கட்டமைப்பு வசதிகளில் கோவை ரயில் நிலையம் முதலிடம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.