சென்னை: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஜெகதாலா என்ற கிராமத்தில் கடந்த 1978ஆம் ஆண்டில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த எம்.குப்பன் என்பவருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, அதை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் நிபந்தனை விதித்திருந்தார்.
பலரிடம் கைமாறிய அந்த நிலைத்தை, அஜித் மற்றும் பிரசாந்த் ஆகியோருடன் "கல்லூரி வாசல்" என்ற படத்தில் கதாநாகியாக நடித்த பூஜா பட் கடந்த 1990ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், அந்த நிலத்தை அரசுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்றும் கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகை பூஜா பட் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ''பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை யாரும் வாங்கவோ? விற்கவோ உரிமையில்லை. அதனால், நடிகை பூஜா பட் நிலத்தை வாங்கியது செல்லாது'' என கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்துள்ளார்.
கல்லூரி வாசல் படத்தில் ''என் மனதை கொள்ளையடித்தவளே'' பாடல் மூலம் இளைஞர்களை கவர்ந்தவர் பூஜா பட் என்பது குறிப்பிடத்தக்கது.