ETV Bharat / state

புழல் சிறை முறைகேடு வழக்கு - 2 வாரத்திற்குள் பதிலளிக்க கண்காணிப்பாளருக்கு உத்தரவு - இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க புழல் சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை: புழல் சிறையில் நடைபெறும் முறைகேடுகளைத் தட்டி கேட்ட கைதி மிரட்டப்பட்டது குறித்து இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க புழல் சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai
author img

By

Published : Oct 2, 2019, 8:38 PM IST

புழல் சிறையில் அடைக்கபட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பல்வேறு பணிகள் வழங்கப்பட்டு அதற்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, காலணிளுக்கு பாலிஸ் செய்யும் பணியில் காலணி ஒன்றுக்கு 49 பைசா வழங்கப்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு காலணி ஒன்றுக்கு 49 பைசா அளிக்கப்பட்ட ஊதியம் 89 பைசாவாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காலணி ஒன்றுக்கு மீண்டும் பழைய கூலி தொகையான 49 பைசா வழங்கப்பட்டுள்ளது. இதானால், வியாசர்பாடியைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி பாண்டியன் என்பவர் ஊதிய குறைப்பு தொடர்பாக புழல் சிறை கண்காணிப்பாளரிடம் கேட்டபொழுது, அவர் பாண்டியனை மிரட்டியுள்ளார்.

பின்னர், பாண்டியன் இதுகுறித்து அவரது மனைவி ஸ்டெல்லாவிடம் தெரிவித்தார். உடனே ஸ்டெல்லா இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் புழல் சிறை பொதுத் தகவல் அதிகாரிக்கு மனு அளித்தார்.

அந்த மனுவிற்கு முறையான பதில் வராத நிலையில், ஸ்டெல்லா கணவரைக்கான சிறைக்கு செல்லும் போதெல்லாம், சிறை கண்காணிப்பாளர் ஸ்டெல்லாவிடம் மனுவை திரும்ப பெறாவிட்டால் உன் கணவனை வேறு சிறைக்கு மாற்றி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ஸ்டெல்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் புழல் சிறை கண்காணிப்பாளர் மீது வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்கா ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து புழல் சிறை கண்காணிப்பாளர் அக்டோபர் 16ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:

பயோ-மெட்ரிக் வழக்கில் மின் பகிர்மான கழகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

புழல் சிறையில் அடைக்கபட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பல்வேறு பணிகள் வழங்கப்பட்டு அதற்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, காலணிளுக்கு பாலிஸ் செய்யும் பணியில் காலணி ஒன்றுக்கு 49 பைசா வழங்கப்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு காலணி ஒன்றுக்கு 49 பைசா அளிக்கப்பட்ட ஊதியம் 89 பைசாவாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காலணி ஒன்றுக்கு மீண்டும் பழைய கூலி தொகையான 49 பைசா வழங்கப்பட்டுள்ளது. இதானால், வியாசர்பாடியைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி பாண்டியன் என்பவர் ஊதிய குறைப்பு தொடர்பாக புழல் சிறை கண்காணிப்பாளரிடம் கேட்டபொழுது, அவர் பாண்டியனை மிரட்டியுள்ளார்.

பின்னர், பாண்டியன் இதுகுறித்து அவரது மனைவி ஸ்டெல்லாவிடம் தெரிவித்தார். உடனே ஸ்டெல்லா இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் புழல் சிறை பொதுத் தகவல் அதிகாரிக்கு மனு அளித்தார்.

அந்த மனுவிற்கு முறையான பதில் வராத நிலையில், ஸ்டெல்லா கணவரைக்கான சிறைக்கு செல்லும் போதெல்லாம், சிறை கண்காணிப்பாளர் ஸ்டெல்லாவிடம் மனுவை திரும்ப பெறாவிட்டால் உன் கணவனை வேறு சிறைக்கு மாற்றி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ஸ்டெல்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் புழல் சிறை கண்காணிப்பாளர் மீது வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்கா ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து புழல் சிறை கண்காணிப்பாளர் அக்டோபர் 16ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:

பயோ-மெட்ரிக் வழக்கில் மின் பகிர்மான கழகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Intro:Body:சிறையில் நடைபெறும் முறைகேடுகளை தட்டி கேட்ட கைதி மிரட்டப்பட்டது குறித்து 2 வாரத்திற்குள் பதிலளிக்க புழல் சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புழல் சிறையில் அடைக்கபட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பல்வேறு பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, புதிதாக தயாரிக்கப்படும் காலணிகளுக்கு பாலிஷ் செய்யும் பணிக்காக வழங்கப்பட்ட கூலி, காலணி ஒன்றுக்கு 49 பைசாவில் இருந்து 89 பைசா'வாக கடந்தாண்டு உயர்த்தப்பட்டது.

ஆனால் எந்த காரணமும் இல்லாமல் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் பழைய கூலி தொகையான 49 பைசா மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி பாண்டியன் என்பவரின் மனைவி ஸ்டெல்லா மேரி என்பவர் அரசு நிர்ணயிக்கும் தொகை மற்றும் ஊதிய குறைப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்டு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் புழல் சிறை பொது தகவல் அதிகாரிக்கு மனு அளித்திருந்தார்.

இந்த மனுவுக்கு இதுவரை பதில் வராத நிலையில், கைதி பாண்டியனை வேறு சிறைக்கு மாற்ற போவதாக சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் மிரட்டி வருவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெல்லா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தான் அனுப்பிய மனுவை திரும்ப பெறாவிட்டால், தன் கணவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து விடுவதாகவும், வேறு சிறைக்கு மாற்றி விடுவதாகவும் சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் மிரட்டி வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

தன் கணவரை புழல் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக அக்டோபர் 16ம் தேதிக்குள் பதிலளிக்க புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமாருக்கு உத்தரவிட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.