ETV Bharat / state

'பாவம்ப்பா... இந்த காக்கா... குருவிகள் எல்லாம்' - பொம்மலாட்டத்தில் அசத்திய மழலைகள் - முகப்பேரிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை: முகப்பேரிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

A puppet awareness program for school children
A puppet awareness program for school children
author img

By

Published : Feb 28, 2020, 8:52 AM IST

சென்னை முகப்பேரில் இயங்கிவரும் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'பொம்மலாட்ட நிகழ்ச்சி' நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 15 நிமிடங்களில் தாய்மொழி கற்றல், தமிழ் நேசிப்பு, பெண் உரிமை, நெகிழி ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்த்தல், பெரியவர்களை மதித்தல், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்தல் போன்ற தலைப்புகளில் மாணவ, மாணவிகள் பொம்மலாட்ட பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடந்த ஒருவார காலமாக எக்ஸ்னோரா அமைப்பு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளித்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விர்சிகா புக் ஆப் ரெக்காடு நிறுவனத்தினர் மாணவ, மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.

இதையும் படிங்க: கோலாகலமாக நடைபெற்ற எருதுவிடும் விழா

சென்னை முகப்பேரில் இயங்கிவரும் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'பொம்மலாட்ட நிகழ்ச்சி' நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 15 நிமிடங்களில் தாய்மொழி கற்றல், தமிழ் நேசிப்பு, பெண் உரிமை, நெகிழி ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்த்தல், பெரியவர்களை மதித்தல், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்தல் போன்ற தலைப்புகளில் மாணவ, மாணவிகள் பொம்மலாட்ட பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடந்த ஒருவார காலமாக எக்ஸ்னோரா அமைப்பு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளித்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விர்சிகா புக் ஆப் ரெக்காடு நிறுவனத்தினர் மாணவ, மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.

இதையும் படிங்க: கோலாகலமாக நடைபெற்ற எருதுவிடும் விழா

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.