ETV Bharat / state

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்குத் தடை - பள்ளிக்கல்வித் துறை செய்திகள்

சென்னை: தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது தெரிவித்துள்ளது.

school-education-department
author img

By

Published : Sep 18, 2019, 12:10 PM IST

இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில்,

உபரி ஆசிரியர்களால் தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டுவரும் நிதி இழப்பினை தவிர்த்திடும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்குகளில் பெறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், அரசு நிதி உதவிபெறும் சிறுபான்மை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

அதன்படி, அரசால் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர் பணியிடங்களை, பணிநிரவல் அடிப்படையில் மட்டுமே முதன்மைக் கல்வி அலுவலர்கள் நிரப்பிக்கொள்ள வேண்டும். மேலும், ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளியில், பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும்.

குறிப்பாக, இப்பணியிடங்களை ஏற்கனவே மற்ற பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை கொண்டு மட்டுமே நிரப்பிக்கொள்ள வேண்டும், எனவே உபரி ஆசிரியர்களைத் தவிர புதிய ஆசிரியர்களை பணிநியமனம் செய்யக் கூடாது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில்,

உபரி ஆசிரியர்களால் தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டுவரும் நிதி இழப்பினை தவிர்த்திடும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்குகளில் பெறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், அரசு நிதி உதவிபெறும் சிறுபான்மை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

அதன்படி, அரசால் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர் பணியிடங்களை, பணிநிரவல் அடிப்படையில் மட்டுமே முதன்மைக் கல்வி அலுவலர்கள் நிரப்பிக்கொள்ள வேண்டும். மேலும், ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளியில், பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும்.

குறிப்பாக, இப்பணியிடங்களை ஏற்கனவே மற்ற பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை கொண்டு மட்டுமே நிரப்பிக்கொள்ள வேண்டும், எனவே உபரி ஆசிரியர்களைத் தவிர புதிய ஆசிரியர்களை பணிநியமனம் செய்யக் கூடாது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:அரசு உதவிபெறும் பள்ளிகளில்
ஆசிரியர் நியமனத்திற்கு தடை


Body:அரசு உதவிபெறும் பள்ளிகளில்
ஆசிரியர் நியமனத்திற்கு தடை

சென்னை, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 60 மாணவர்கள் இருந்தால் இரண்டு ஆசிரியர்களும் வரையும், அதற்குமேல் கூடுதலாக 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என நியமனம் செய்து கொள்ளலாம்.

6 ,7, 8 வகுப்புகளில் 35 மாணவருக்கு ஒரு ஆசிரியரும் ,9,10,11,12 வகுப்பில் 40 மாணவர்கள் ஒரு ஆசிரியரும் என்ற வீதத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்து ஆசிரியர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை உபரி ஆசிரியர்கள் எனக்கருதி ஆசிரியர்கள் தேவை உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.


தமிழகத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒரு பள்ளியில் பணியில் சேர்ந்தால் அந்தப் பள்ளியிலிருந்து மாணவர்கள் குறைவாக இருந்தாலும் வேறு பள்ளிக்கு மாற்றப்படாமல் இருந்து வந்தனர். மேலும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளை பொறுத்தவரை அந்தப் பள்ளியின் நிர்வாகம் தனக்கு தேவையான ஆசிரியர்களை தேர்வு செய்து அதற்கு பள்ளிக்கல்வித்துறையின் அனுமதியினை பெற்றால் போதும். அந்த ஆசிரியர் தொடர்ந்து அந்தப் பள்ளியிலேயே பணிபுரிந்து வருவார். இதனால் அரசு பள்ளியில் பணியில் சேர முடியாத பெரும்பாலான ஆசிரியர்கள் சிறுபான்மை அமைப்புகள் மற்றும் சில நிறுவனங்கள் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், உபரி ஆசிரியர்கள் அரசுக்கு ஏற்பட்டுவரும் நிதி இழைப்பினை தவிர்த்திடும் வகையிலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்குகளில் பெறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், அரசு நிதி உதவிபெறும் சிறுபான்மை சிறுபான்மை ஏற்ற தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

ஒரு பள்ளி நிர்வகிக்கும் தனி மேலாண்மையும் பள்ளியும் ஒரு அலகாகவும் ,ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளை கொண்டு கூட்டு மேலாண்மையாக செயல்படும் பள்ளிகள் ஒரு அலகாகவும் கருதப்படுகிறது.
அரசால் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை பணியாளர் நேரம் செய்யப்படும்போது ஒவ்வொரு ஆண்டும் தேசிய நிலவரப்படி அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களும் செய்யப்படுவதை இப்பள்ளிகள் தொடர்ந்து கடைபிடிக்கலாம்.

பணியாளர் நிர்ணயம் செய்யப்படும்போது 1991- 92 முன்னர் அப்பள்ளிக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் மற்றும் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும் பணியிடங்கள் இதில் எது குறைவோ அதனையே அப்பள்ளிக்கு அனுமதிக்கப்பட்டு பணியாளர் நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட வேண்டும்.

நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்யப்படும் போது, தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சேவையிலிருந்து நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக இருந்தால் நடுநிலை பள்ளி ஆசிரியர்களை அந்த பணியிடத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

9 10 11 12ம் வகுப்புகளில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் தேவை இருந்து, கீழ்நிலை வகுப்புகளில் முழுநிலை வகுப்புகளில் கற்பதற்குரிய தகுதியுடன் ஆசிரியர்கள் இருந்தால் அந்த ஆசிரியர்களை மேல்நிலை வகுப்பு பாடங்கள் எடுக்க அனுமதிக்கலாம்.
ஒவ்வொரு கூட்டு மேலாண்மையும் ஒரு அழகாக கருதப்படுவதால் அந்த மேலாண்மைக்குள் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய அனைத்து பள்ளிகளில் பள்ளி வாரியாக பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அந்த நிர்வாகத்திற்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் .

ஒரு மேலாண்மையில் உள்ள பணியிடத்திற்கு பணி வழங்க முடியாமல் உபரி ஆசிரியர்கள் இருந்தால் அவர்களை வேறு மேலாண்மையில் காலியாக உள்ள பணியிடத்தில் பணி அமர்த்த வேண்டும்.

மாவட்டத்திற்குள் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய முடியாவிட்டால் அவர்களை மாநில அளவில் மாற்றுப் பணி வழங்க வேண்டும். அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இடங்கள் காலியாக இல்லாததால் அவர்களை அரசு பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி பயிற்சி 1991-92 ஆண்டிற்கு பிறகு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உதவி பெறும் பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு பின் அந்த பணியிடங்களை நிரந்தரமாக வலி ஏற்படும் பொழுது நிரப்பக் கூடாது பணியிடங்கள் காலாவதி ஆகிவிடும்.

உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதால் அரசுக்கு கூடுதல் செலவு ஏதும் ஏற்படக்கூடாது மேலும் புதிய நியமனங்கள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வெளியிடப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் 9. 4. 2019 முதல் கூட்டு மேலாண்மை இதர மேலாண்மையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மாற்றுவதில் மூலமாக பணி அமர்த்தும் பணி நிறைவு பெறும் வரை நிதியுதவி பெறும் பள்ளிகளில் எந்த ஒரு பணியிடங்களும் பணி நியமனம் புதிதாக செய்தல் கூடாது எந்த ஒரு புதிய ஆசிரியர் பணியிடத்திற்கும் ஏற்பு அளித்தல் கூடாது என்று அதில் கூறியுள்ளார்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.