ETV Bharat / state

பிளாட்பாரத்தில் தூங்கிய நபரை கட்டையால் தாக்கி கொலை செய்தவர் கைது - Rayapetta Government Hospital

சென்னையில் பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த நபரை கட்டையால் தாக்கி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

பிளாட்பாரத்தில் தூங்கும் நபரை கட்டையால் தாக்கி கொலை!
பிளாட்பாரத்தில் தூங்கும் நபரை கட்டையால் தாக்கி கொலை!
author img

By

Published : Jan 16, 2023, 7:55 AM IST

சென்னை வடபழனி 100 அடி சாலை அன்னை அலுமினியம் ட்ரேடர்ஸ் கடை அருகில் பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டதாக வடபழனி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது உயிரிழந்த நபர் ஜேம்ஸ் வேதராஜ்(62). இவர் எலக்ட்ரிஷன் வேலை செய்து சூளைமேட்டில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வடபழனியில் உள்ள பிளாட்பாரத்தில் உறங்கச் சென்றபோது ராஜ்குமார் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ராஜ்குமார் ஜேம்ஸ் வேதராஜை கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பின் வேதராஜ் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நெல்லையில் கோயில் பூசாரி கொலை - 5 பேரிடம் போலீஸ் விசாரணை

சென்னை வடபழனி 100 அடி சாலை அன்னை அலுமினியம் ட்ரேடர்ஸ் கடை அருகில் பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டதாக வடபழனி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது உயிரிழந்த நபர் ஜேம்ஸ் வேதராஜ்(62). இவர் எலக்ட்ரிஷன் வேலை செய்து சூளைமேட்டில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வடபழனியில் உள்ள பிளாட்பாரத்தில் உறங்கச் சென்றபோது ராஜ்குமார் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ராஜ்குமார் ஜேம்ஸ் வேதராஜை கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பின் வேதராஜ் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நெல்லையில் கோயில் பூசாரி கொலை - 5 பேரிடம் போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.