ETV Bharat / state

காதலிக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம்:  காதலி, மாமியாரைக் கொன்று இளைஞர் தற்கொலை!

author img

By

Published : Feb 5, 2021, 3:10 PM IST

சென்னை: கொருக்குப்பேட்டை அருகே காதலித்த பெண்ணை வேறொருவருக்கு நிச்சயம் செய்து கொடுத்ததால் ஆத்திரமடைந்த காதலன், காதலி, அவரது தாயார் மீது மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தி தானும் தற்கொலை செய்து கொண்டார்.

காதலிக்கு தீ வைத்த இளைஞர் தற்கொலை
காதலிக்கு தீ வைத்த இளைஞர் தற்கொலை

சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி தெருவைச் சேர்ந்தவர் ஓட்டுநர் சதீஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரஜிதா என்ற பெண்ணை 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெண்ணின் தாயார் வெங்கட்டம்மாள் (46) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஜிதாவிற்கு வேறொருவருடன் வெங்கட்டம்மாள் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சதீஷ் தனது காதலி வீட்டிற்கு மண்ணெண்ணெய் கேனுடன் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், சதீஷ் மண்ணெண்ணையை தன் மீதும், காதலி ரஜிதா, அவரது தாயார் வெங்கட்டம்மாள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் மூன்று பேர் மீதும் பற்றிய தீயின் வேகம் வீடு முழுவதும் பரவத் தொடங்கியது.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் மூவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். இது குறித்து கொருக்குப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் விடுதியில் காதல் ஜோடி தற்கொலை: போலீஸார் விசாரணை!

சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி தெருவைச் சேர்ந்தவர் ஓட்டுநர் சதீஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரஜிதா என்ற பெண்ணை 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெண்ணின் தாயார் வெங்கட்டம்மாள் (46) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஜிதாவிற்கு வேறொருவருடன் வெங்கட்டம்மாள் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சதீஷ் தனது காதலி வீட்டிற்கு மண்ணெண்ணெய் கேனுடன் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், சதீஷ் மண்ணெண்ணையை தன் மீதும், காதலி ரஜிதா, அவரது தாயார் வெங்கட்டம்மாள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் மூன்று பேர் மீதும் பற்றிய தீயின் வேகம் வீடு முழுவதும் பரவத் தொடங்கியது.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் மூவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். இது குறித்து கொருக்குப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் விடுதியில் காதல் ஜோடி தற்கொலை: போலீஸார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.