ETV Bharat / state

சென்னையில் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் உடல் 51 நாட்களுக்கு பிறகு ஒப்படைப்பு

author img

By

Published : Jul 1, 2022, 11:31 AM IST

சென்னையில் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் உடல் , தலையின்றி 51 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னையில் திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி கொலை
சென்னையில் திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி கொலை

சென்னை: மணலியை சேர்ந்த திமுக பிரமுகரான சக்கரபாணி (65). கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மகன் மணலி காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். போலீசார் சக்கரபாணியின் செல்போன் எண்ணை ஆராய்ந்த போது ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சாக்குமூட்டையில் துண்டுகளாக வெட்டி கொலை செய்திருப்பதை கண்டறிந்தனர்.

மேலும் தகாத உறவு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தமீம் பானு மற்றும் அவரது சகோதரர் வாஷிம்பாஷா ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து சக்கரபாணியை துண்டாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு என்பவர் இருந்தது தெரியவந்தது. 3 பேர் மீதும் ராயபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

வெட்டப்பட்ட சக்கரபாணியின் தலையை அடையாற்றில் வீசியதாக வாஷிம் பாஷா வாக்குமூலம் அளித்தார். குறிப்பாக இந்த வழக்கில் வீசப்பட்ட தலை, வழக்கிற்கு முக்கியம் என்பதால் வாஷிம் பாஷா தலை தூக்கி வீசப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். அதனடிப்படையில் ராயபுரம் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் அடையாறில் வீசப்பட்ட தலையை தீவிரமாக தேடி உள்ளனர்.

கடந்த 51 நாட்களாக தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு, ஸ்கூபா வீரர்கள் ராட்சத கொக்கி மூலமாக தீவிரமாக தேடினர். ஆனால் அவரது தலை கிடைக்கவில்லை. இதனையடுத்து டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டு திமுக பிரமுகரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கூட்டுறவு சங்க தலைவர்கள் காசோலையில் கையொப்பமிட்டு அதிகாரத்தை நீக்கும் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவு'

சென்னை: மணலியை சேர்ந்த திமுக பிரமுகரான சக்கரபாணி (65). கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மகன் மணலி காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். போலீசார் சக்கரபாணியின் செல்போன் எண்ணை ஆராய்ந்த போது ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சாக்குமூட்டையில் துண்டுகளாக வெட்டி கொலை செய்திருப்பதை கண்டறிந்தனர்.

மேலும் தகாத உறவு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தமீம் பானு மற்றும் அவரது சகோதரர் வாஷிம்பாஷா ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து சக்கரபாணியை துண்டாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு என்பவர் இருந்தது தெரியவந்தது. 3 பேர் மீதும் ராயபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

வெட்டப்பட்ட சக்கரபாணியின் தலையை அடையாற்றில் வீசியதாக வாஷிம் பாஷா வாக்குமூலம் அளித்தார். குறிப்பாக இந்த வழக்கில் வீசப்பட்ட தலை, வழக்கிற்கு முக்கியம் என்பதால் வாஷிம் பாஷா தலை தூக்கி வீசப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். அதனடிப்படையில் ராயபுரம் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் அடையாறில் வீசப்பட்ட தலையை தீவிரமாக தேடி உள்ளனர்.

கடந்த 51 நாட்களாக தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு, ஸ்கூபா வீரர்கள் ராட்சத கொக்கி மூலமாக தீவிரமாக தேடினர். ஆனால் அவரது தலை கிடைக்கவில்லை. இதனையடுத்து டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டு திமுக பிரமுகரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கூட்டுறவு சங்க தலைவர்கள் காசோலையில் கையொப்பமிட்டு அதிகாரத்தை நீக்கும் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.