சென்னை ஏழுகிணறு பகுதி சண்முக நாராயணன் தெருவில் சுரேஷ் குமார் - கலைச்செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ஆலன் ( 8 ). இந்நிலையில் ஆலன் வீட்டில் தாய், சகோதரியுடன் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது பெய்த மழையால் திடீர் என வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி சிறுவன் ஆலன் மீது இடிந்து விழுந்தது. உடனே சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆலனை கொண்டு சென்றனர். ஆனால், ஆலனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதில் நல்வாய்ப்பாக ஆலனின் தாய், சகோதரி உயிர் பிழைத்தனர். கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமான இடம் என்பதால் பல நாட்களாக வீட்டினை சீரமைக்கக்கோரி முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியில் உள்ளோர் ஆதங்கத்துடன் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : சுபஸ்ரீ வழக்கில் இதுவரை நடந்தது என்ன?