ETV Bharat / state

"முரளிதரன் பெருமையை பேசும் படமாக 800 திரைப்படம் இருக்காது" - இயக்குநர் ஸ்ரீபதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 3:47 PM IST

800 திரைபடம் முத்தையா முரளிதரன் பெருமையை பேசும் படமாக இருக்கக் கூடாது என்று முத்தையா முரளிதரன் என்னிடம் கூறினார் என இயக்குநர் ஸ்ரீபதி தெரிவித்தார்.

800 திரைப்படம்
800 திரைப்படம்

சென்னை: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 800 திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்றிரவு (செப். 8) நடைபெற்றது. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீபதி இயக்கி உள்ளார். முத்தையா முரளிதரனாக நடிகர் மாது மிட்டல் நடித்து உள்ளார்.

முத்தையா முரளிதரன் பெருமையை பேசும் படமாக 800 திரைப்படம் இருக்காது - இயக்குனர் ஸ்ரீபதி
முத்தையா முரளிதரன் பெருமையை பேசும் படமாக 800 திரைப்படம் இருக்காது - இயக்குனர் ஸ்ரீபதி

இது குறித்து இயக்குனர் ஸ்ரீபதி பேசும்போது, பயோபிக் எடுப்பதற்கு முதலில் உண்மையை சொல்வதற்கான தைரியம் வேண்டும். இந்தப் படம் முத்தையா முரளிதரன் பெருமையை பேசும் படமாக இருக்கக் கூடாது என்று முத்தையா முரளிதரன் என்னிடம் கூறினார். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு என் மனதில் இருந்த எண்ணங்கள் படம் தொடங்கும்போது மாறிவிட்டது.

முத்தையா முரளிதரன் வாழ்க்கையை முழுமையாக ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடம் பேசி இந்த கதையை எழுதினேன். கதை எழுதும் போதும், படத்தை எடுக்கும் போதும் பல்வேறு சவால்கள் இருந்தன. இதையெல்லாம் தாண்டி ஒரு நேர்மையான படத்தை எடுத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பேசும்போது, "2018 ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு, இயக்குனர் ஸ்ரீபதி ஆகியோர் என்னை சந்தித்து நற்குணம் மன்றம் மூலமாக இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வந்தனர். வெங்கட் பிரபு இலங்கைக்கு என் வீட்டுக்கு வந்த போது நான் வாங்கிய கோப்பைகளை பார்த்து என் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கலாம் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீபதி இலங்கையில் இரண்டு ஆண்டுகள் தங்கி இந்த கதையை எழுதினார். வெங்கட் பிரபு தான் இந்த படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த படத்தை ஸ்ரீபதி இயக்க முடிவு முடிவு செய்தோம். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது.

அதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதை எல்லாம் மீறி இந்தப் படத்தை எடுக்க முழுக் காரணம் இயக்குனர் ஸ்ரீபதி தான். இந்தப் படத்தை எடுக்க பல்வேறு தடைகள் வந்தது. இதே போல் தான் எனது வாழ்க்கையிலும் பல்வேறு தடைகள் இருந்தது. இலங்கையில் இருந்த பாதுகாப்பாற்ற சூழ்நிலைகளையும் மீறி காவல்துறை பாதுகாப்புடன் 80 நாட்கள் படம் எடுக்கப்பட்டது. படக்குழுவினரின் உழைப்பினால் மட்டுமே இந்த படம் சிறந்த படமாக வந்துள்ளது.

800 விக்கெட்டுகளை எடுக்க கிரிக்கெட் மைதானத்தை தாண்டி, எனது சிறு வயது வாழ்க்கை, இலங்கையில் நடந்த பல்வேறு பிரச்சினைகள் என்று எனது வாழ்க்கையின் மறுபக்கத்தை கூறும் படமாக இது இருக்கும். 800வது விக்கெட் எடுக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதற்கு மேல் பவுலிங் செய்ய வேண்டாம் என்ற மனநிலை அந்த 800 விக்கெட் எடுத்த பிறகு எனக்கு இருந்தது.

சச்சின் எப்படி எல்லா மேட்ச்சிலும் 100 அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைத்தனரோ அதேபோல் முரளிதரன் அணியில் இருந்தால் எல்லா விக்கெட்டுகளையும் எடுத்து விடுவார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளையும் நான் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைத்தனர்.

அனைவரும் இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். மனிதனுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்றால் தோல்வி கண்டிப்பாக வரவேண்டும். இந்தப் படம் தொடங்கும் போதும் பல்வேறு தடைகள் வந்தது. தோல்விகளை வெற்றியின் ஆரம்பமாக கருதி கடின உழைப்பை அளித்து தான், நான் என் வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளேன்" என்று முரளிதரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜவான் முதல் நாள் வசூல் இவ்வளவா? - வெளியான தகவல்!

சென்னை: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 800 திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்றிரவு (செப். 8) நடைபெற்றது. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீபதி இயக்கி உள்ளார். முத்தையா முரளிதரனாக நடிகர் மாது மிட்டல் நடித்து உள்ளார்.

முத்தையா முரளிதரன் பெருமையை பேசும் படமாக 800 திரைப்படம் இருக்காது - இயக்குனர் ஸ்ரீபதி
முத்தையா முரளிதரன் பெருமையை பேசும் படமாக 800 திரைப்படம் இருக்காது - இயக்குனர் ஸ்ரீபதி

இது குறித்து இயக்குனர் ஸ்ரீபதி பேசும்போது, பயோபிக் எடுப்பதற்கு முதலில் உண்மையை சொல்வதற்கான தைரியம் வேண்டும். இந்தப் படம் முத்தையா முரளிதரன் பெருமையை பேசும் படமாக இருக்கக் கூடாது என்று முத்தையா முரளிதரன் என்னிடம் கூறினார். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு என் மனதில் இருந்த எண்ணங்கள் படம் தொடங்கும்போது மாறிவிட்டது.

முத்தையா முரளிதரன் வாழ்க்கையை முழுமையாக ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடம் பேசி இந்த கதையை எழுதினேன். கதை எழுதும் போதும், படத்தை எடுக்கும் போதும் பல்வேறு சவால்கள் இருந்தன. இதையெல்லாம் தாண்டி ஒரு நேர்மையான படத்தை எடுத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பேசும்போது, "2018 ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு, இயக்குனர் ஸ்ரீபதி ஆகியோர் என்னை சந்தித்து நற்குணம் மன்றம் மூலமாக இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வந்தனர். வெங்கட் பிரபு இலங்கைக்கு என் வீட்டுக்கு வந்த போது நான் வாங்கிய கோப்பைகளை பார்த்து என் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கலாம் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீபதி இலங்கையில் இரண்டு ஆண்டுகள் தங்கி இந்த கதையை எழுதினார். வெங்கட் பிரபு தான் இந்த படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த படத்தை ஸ்ரீபதி இயக்க முடிவு முடிவு செய்தோம். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது.

அதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதை எல்லாம் மீறி இந்தப் படத்தை எடுக்க முழுக் காரணம் இயக்குனர் ஸ்ரீபதி தான். இந்தப் படத்தை எடுக்க பல்வேறு தடைகள் வந்தது. இதே போல் தான் எனது வாழ்க்கையிலும் பல்வேறு தடைகள் இருந்தது. இலங்கையில் இருந்த பாதுகாப்பாற்ற சூழ்நிலைகளையும் மீறி காவல்துறை பாதுகாப்புடன் 80 நாட்கள் படம் எடுக்கப்பட்டது. படக்குழுவினரின் உழைப்பினால் மட்டுமே இந்த படம் சிறந்த படமாக வந்துள்ளது.

800 விக்கெட்டுகளை எடுக்க கிரிக்கெட் மைதானத்தை தாண்டி, எனது சிறு வயது வாழ்க்கை, இலங்கையில் நடந்த பல்வேறு பிரச்சினைகள் என்று எனது வாழ்க்கையின் மறுபக்கத்தை கூறும் படமாக இது இருக்கும். 800வது விக்கெட் எடுக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதற்கு மேல் பவுலிங் செய்ய வேண்டாம் என்ற மனநிலை அந்த 800 விக்கெட் எடுத்த பிறகு எனக்கு இருந்தது.

சச்சின் எப்படி எல்லா மேட்ச்சிலும் 100 அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைத்தனரோ அதேபோல் முரளிதரன் அணியில் இருந்தால் எல்லா விக்கெட்டுகளையும் எடுத்து விடுவார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளையும் நான் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைத்தனர்.

அனைவரும் இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். மனிதனுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்றால் தோல்வி கண்டிப்பாக வரவேண்டும். இந்தப் படம் தொடங்கும் போதும் பல்வேறு தடைகள் வந்தது. தோல்விகளை வெற்றியின் ஆரம்பமாக கருதி கடின உழைப்பை அளித்து தான், நான் என் வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளேன்" என்று முரளிதரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜவான் முதல் நாள் வசூல் இவ்வளவா? - வெளியான தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.