ETV Bharat / state

‘ஏழு பேர் விடுதலையில் இனி ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்’ - கைவிரித்த முதலமைச்சர்

சென்னை: எழுவர் விடுதலையில் தமிழ்நாடு அரசு தன் வேலையை சரியாக செய்துவிட்டதாகவும், இனி ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 9, 2019, 3:39 PM IST

edappadi

சட்டப்பேரவையில் சட்டம், நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக உறுப்பினர் சுதர்சனம், எழுவர் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீண்ட நாட்களாகிறது எனவும், அது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பேசினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எழுவர் விடுதலை தொடர்பாக தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், ஆளுநர் இனி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். அதே நேரத்தில், திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் பேசினார். தொடர்ந்து பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை நீதிமன்றம் உங்களுக்கு கொடுத்திருப்பதாகவும், எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் கூறினார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது ஏன் எனவும், சட்டம், தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானது எனவும் கூறினார். அதற்கு, தீர்மானம் போட்டு அனுப்பிய பிறகு ஆளுநரை நேரில் சந்தித்தோ, கடிதம் மூலமாகவோ அழுத்தம் கொடுத்தீர்களா என துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசு முடிவெடுக்கலாம் என சொன்னபிறகு, உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி விடுதலை செய்ய தீர்மானம் போடப்பட்டு அனுப்பப்பட்டதாக விளக்கமளித்தார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் 7 பேர் விடுதலையை அரசாங்கமே தீர்மானித்துக் கொள்ளலாம் என கூறியும் தற்போது அது ஆளுநரிடம் இருக்கிறது. அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துரைமுருகன் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் சட்டம், நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக உறுப்பினர் சுதர்சனம், எழுவர் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீண்ட நாட்களாகிறது எனவும், அது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பேசினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எழுவர் விடுதலை தொடர்பாக தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், ஆளுநர் இனி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். அதே நேரத்தில், திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் பேசினார். தொடர்ந்து பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை நீதிமன்றம் உங்களுக்கு கொடுத்திருப்பதாகவும், எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் கூறினார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது ஏன் எனவும், சட்டம், தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானது எனவும் கூறினார். அதற்கு, தீர்மானம் போட்டு அனுப்பிய பிறகு ஆளுநரை நேரில் சந்தித்தோ, கடிதம் மூலமாகவோ அழுத்தம் கொடுத்தீர்களா என துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசு முடிவெடுக்கலாம் என சொன்னபிறகு, உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி விடுதலை செய்ய தீர்மானம் போடப்பட்டு அனுப்பப்பட்டதாக விளக்கமளித்தார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் 7 பேர் விடுதலையை அரசாங்கமே தீர்மானித்துக் கொள்ளலாம் என கூறியும் தற்போது அது ஆளுநரிடம் இருக்கிறது. அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துரைமுருகன் வலியுறுத்தினார்.

Intro:Body:

[7/9, 12:59 PM] எழுவர் விடுதலையில் தமிழக அரசு தன் வேலையை சரியாக செய்துவிட்டதாகவும், இனி ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் 





சட்டப்பேரவையில் சட்டத்துறை, நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் சுதர்சனம், எழுவர் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீண்ட நாட்களாகிறது எனவும் அது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எழுவர் விடுதலை தொடர்பாக தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், ஆளுநர் இனி முடிவெடுப்பார் என தெரிவித்தார். அதே நேரத்தில், திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை கூட்டத்தில் நளினியை மற்றும் விடுதலை செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் பேசினார். தொடர்ந்து பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர், துரைமுருகன் தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை நீதிமன்றம் உங்களுக்கு கொடுத்திருப்பதாகவும், எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என பேசினார். தொடர்ந்து பேசிய முதல்வர் நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது ஏன் எனவும், சட்டம், தண்டனை என்பது எல்லோருக்கும் பதிவானது எனவும் முதல்வர் பேசினார். தொடர்ந்து பேசிய துரைமுருகன்,  தீர்மானம் போட்டு அனுப்பிய பிறகு ஆளுநரை நேரில் சந்தித்தோ, கடிதம் மூலமாகவோ அழுத்தம் கொடுத்தீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சி.வி சண்முகம், தமிழக அரசு முடிவெடுக்கலாம் என சொன்னபிறகு, உடனடியாக அமைச்சரவையை கூட்டி விடுதலையை செய்ய தீர்மானம் போடப்பட்டு அனுப்பப்பட்டதாகவும், 

காவிரி விவகாரத்தில் திமுக ஆறு, ஏழு ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் ? தெரியும் என பேசினார். தொடர்ந்து பேசிய துரைமுருகன், காவிரி விவகாரத்தில் தீர்ப்பை பெற்றது திமுக தான், அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தார். இறுதியாக பேசிய சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம், தமிழக மக்களுக்கு நலன் தரும் திட்டங்களை ஆதரிப்போம் எனவும், எதிர்க்கும் திட்டத்தை எதிர்ப்போம் என தெரிவித்தார்.









 1:13 PM : சட்டத்துறை சிறைச்சாலை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சன பேசுகையில் 7 பேர் விடுதலையில் மாநில  ஆளுநருக்கு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநரிடம் அளித்து 9 மாதங்கள் ஆகியும் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை தமிழக அரசு அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்த முதல்வர் ஆளுநரிடம் சட்டப் பேரவைத் தீர்மானத்தை தந்தாகிவிட்டது ஆனால் உங்கள் ஆட்சி காலத்தில் நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் மற்றவர்களுக்கு தண்டனை தரலாம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி எங்கள் என்றும் அவர் தெரிவித்தார் அதற்கு பதிலளித்த திமுக துணை தலைவர் துரைமுருகன் நாங்கள் அப்போது அவர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி இன்னும் பல முயற்சிகள் நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்தார் ஆனால் நீங்கள் உச்ச நீதிமன்றம 7 பேர் விடுதலையை அரசாங்கமே தீர்மானித்துக் கொள்ளலாம் என கூறியும் தற்போது அது ஆளுநரிடம் இருக்கிறது அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.