ETV Bharat / state

அம்பேத்கர் சமூக நலச்சங்க முன்னாள் தலைவர் வெட்டிக் கொலை - திமுக பிரமுகர் உள்பட 7 பேர் கைது - 7 arrested ambedkar social welfare party leader stabbed to death

சென்னை சேத்துப்பட்டில் அம்பேத்கர் சமூக நலச்சங்கம் என்ற அமைப்பின் தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

7 பேர் கைது
7 பேர் கைது
author img

By

Published : Oct 28, 2021, 11:41 AM IST

சென்னை: சேத்துப்பட்டு ரங்கநாதன் தெருவைச் சேர்ந்த அம்பேத்கர் சமூக நலச்சங்கத் தலைவரான இளங்கோவன் (50), அதேபகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்குச் சீதா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

அக்டோபர் 25ஆம் தேதி இளங்கோவன் தனது நண்பரான ஜெயவேல் என்பவருடன் தனது டீக்கடை அருகில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் இளங்கோவனை பயங்கர ஆயுதங்களால் வெட்டி தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த இளங்கோவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (அக்.26) அவர் உயிரிழந்தார். இளங்கோவனைக் கொலை செய்த கும்பல் மீது சேத்துப்பட்டு காவல் துறையினர் கொலை வழக்கு உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இளங்கோவனுக்கும், திமுக இளைஞரணி உறுப்பினர் சஞ்சய் பிரபுக்கும் முன்விரோதம் இருந்துவந்ததாகவும், அவர் கடந்த மாதம் 20ஆம் தேதி இளங்கோவன் டீக்கடைக்கு ஆயுதங்களுடன் சென்று அங்கிருந்தவர்களை மிரட்டியதும் தெரியவந்தது.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சஞ்சய் பிரபு, தமிழா, குஜ்ஜி ராகேஷ், ஆகாஷ், விஜய், மூர்த்தி, டேனி ராஜ் ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பேருந்தில் ரகளை செய்த சேட்டை பாய்ஸ் - அடித்து விரட்டிய காவல் துறை

சென்னை: சேத்துப்பட்டு ரங்கநாதன் தெருவைச் சேர்ந்த அம்பேத்கர் சமூக நலச்சங்கத் தலைவரான இளங்கோவன் (50), அதேபகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்குச் சீதா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

அக்டோபர் 25ஆம் தேதி இளங்கோவன் தனது நண்பரான ஜெயவேல் என்பவருடன் தனது டீக்கடை அருகில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் இளங்கோவனை பயங்கர ஆயுதங்களால் வெட்டி தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த இளங்கோவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (அக்.26) அவர் உயிரிழந்தார். இளங்கோவனைக் கொலை செய்த கும்பல் மீது சேத்துப்பட்டு காவல் துறையினர் கொலை வழக்கு உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இளங்கோவனுக்கும், திமுக இளைஞரணி உறுப்பினர் சஞ்சய் பிரபுக்கும் முன்விரோதம் இருந்துவந்ததாகவும், அவர் கடந்த மாதம் 20ஆம் தேதி இளங்கோவன் டீக்கடைக்கு ஆயுதங்களுடன் சென்று அங்கிருந்தவர்களை மிரட்டியதும் தெரியவந்தது.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சஞ்சய் பிரபு, தமிழா, குஜ்ஜி ராகேஷ், ஆகாஷ், விஜய், மூர்த்தி, டேனி ராஜ் ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பேருந்தில் ரகளை செய்த சேட்டை பாய்ஸ் - அடித்து விரட்டிய காவல் துறை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.