ETV Bharat / state

ஆவடி அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

author img

By

Published : Nov 26, 2020, 10:48 PM IST

சென்னை: ஆவடி அருகே தண்ணீர் தேங்கியுள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6-year-old boy die
6-year-old boy die

ஆவடி அடுத்த கொள்ளுமேடு, ஆர்ச் அந்தோணி நகரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். லாரி ஓட்டுநரான இவருக்கு, சங்கீதா என்ற மனைவியும், ஆறு வயதில் மோகன்ராஜ் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில், கமலக்கண்ணன் வீட்டு அருகில் புதிதாக கட்டட பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு, அதை மூடாமல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் மழையால் கழிவுநீர் தொட்டி முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனிடையே, வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த மோகன்ராஜ், தண்ணீர் தேங்கியுள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தான். சிறிது நேரத்துக்கு பிறகு, மோகன்ராஜை தாய் சங்கீதா தேடியபோது, கழிவுநீர் தொட்டியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோகன்ராஜை மீட்டு ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே மோகன்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி அடுத்த கொள்ளுமேடு, ஆர்ச் அந்தோணி நகரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். லாரி ஓட்டுநரான இவருக்கு, சங்கீதா என்ற மனைவியும், ஆறு வயதில் மோகன்ராஜ் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில், கமலக்கண்ணன் வீட்டு அருகில் புதிதாக கட்டட பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு, அதை மூடாமல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் மழையால் கழிவுநீர் தொட்டி முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனிடையே, வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த மோகன்ராஜ், தண்ணீர் தேங்கியுள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தான். சிறிது நேரத்துக்கு பிறகு, மோகன்ராஜை தாய் சங்கீதா தேடியபோது, கழிவுநீர் தொட்டியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோகன்ராஜை மீட்டு ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே மோகன்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.