ETV Bharat / state

தொழில் அதிபர் கடத்தல் விவகாரம்: 6 காவலர்களை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவு - தொழில் அதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட விவகாரம்

சென்னை - திருமங்கலத்தில் தொழில் அதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட விவகாரத்தில் காவல் உதவி ஆணையர் உள்ளிட்ட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

6 காவலர்கள் சஸ்பெண்ட்
6 காவலர்கள் சஸ்பெண்ட்
author img

By

Published : Nov 2, 2021, 4:53 PM IST

சென்னை: அய்யம்பாக்கத்தைச் சேர்ந்தவர், தொழிலதிபர் ராஜேஷ். இவர் 2019ஆம் ஆண்டு தன்னையும், தனது குடும்பத்தினரையும் கடத்தி சொத்துகளை அபகரித்ததாக சிலரின் மீது புகாரளித்திருந்தார்.

புகாரின் முகாந்திரம் குறித்து விசாரித்து அறிக்கைத் தாக்கல்செய்ய, அப்போது தமிழ்நாடு டிஜிபியாக இருந்த திரிபாதி, சிபிசிஐடி காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

விசாரணையில் தொழிலதிபர் சீனிவாச ராவ், ராஜேஷிடம் கொடுத்த கடனுக்காக ரவுடிகள், காவல் துறை அலுவலர்கள் மூலம் பிரச்சினை கொடுத்தது தெரியவந்தது.

அன்றே காவல் துறையினர் மீது வழக்குப்பதிவு

தொடர்ந்து, சென்னை - திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா, சங்கர், அனைத்திந்திய இந்து மஹா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் சீனிவாச ராவ், அவரது மகன் தருண் கிருஷ்ண பிரசாத், சிவா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய, அப்போதைய டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட காவல் அலுவலர்கள் உள்ளிட்ட 10 பேரை கைதுசெய்ய, சிபிசிஐடி காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். முதற்கட்டமாக, கோடம்பாக்கம் சீனிவாச ராவை கானத்தூரில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசாருக்கே அதிரடி காட்டிய கமிஷனர்

இந்நிலையில் தொழில் அதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வரும் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா, சங்கர் ஆகிய 6 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தொழிலதிபர் கடத்தல் விவகாரம் - இந்துமஹா சபை தலைவர் கைது

சென்னை: அய்யம்பாக்கத்தைச் சேர்ந்தவர், தொழிலதிபர் ராஜேஷ். இவர் 2019ஆம் ஆண்டு தன்னையும், தனது குடும்பத்தினரையும் கடத்தி சொத்துகளை அபகரித்ததாக சிலரின் மீது புகாரளித்திருந்தார்.

புகாரின் முகாந்திரம் குறித்து விசாரித்து அறிக்கைத் தாக்கல்செய்ய, அப்போது தமிழ்நாடு டிஜிபியாக இருந்த திரிபாதி, சிபிசிஐடி காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

விசாரணையில் தொழிலதிபர் சீனிவாச ராவ், ராஜேஷிடம் கொடுத்த கடனுக்காக ரவுடிகள், காவல் துறை அலுவலர்கள் மூலம் பிரச்சினை கொடுத்தது தெரியவந்தது.

அன்றே காவல் துறையினர் மீது வழக்குப்பதிவு

தொடர்ந்து, சென்னை - திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா, சங்கர், அனைத்திந்திய இந்து மஹா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் சீனிவாச ராவ், அவரது மகன் தருண் கிருஷ்ண பிரசாத், சிவா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய, அப்போதைய டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட காவல் அலுவலர்கள் உள்ளிட்ட 10 பேரை கைதுசெய்ய, சிபிசிஐடி காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். முதற்கட்டமாக, கோடம்பாக்கம் சீனிவாச ராவை கானத்தூரில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசாருக்கே அதிரடி காட்டிய கமிஷனர்

இந்நிலையில் தொழில் அதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வரும் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா, சங்கர் ஆகிய 6 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தொழிலதிபர் கடத்தல் விவகாரம் - இந்துமஹா சபை தலைவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.