ETV Bharat / state

ரூ. 5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

author img

By

Published : Oct 9, 2019, 10:59 PM IST

சென்னை: குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மத்திய வருவாய் புலனாய்வுத் துறை

சென்னை வடபெரும்பாக்கம் ஜெயா நகரில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மூத்த அலுவலர் கருணாகரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் அங்கு பலத்த சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. ஐந்து கோடி மதிப்புள்ள சுமார் 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செம்மரக்கட்டைகள், சுங்கவரி இலாகாவில் ஒப்படைக்க எடுத்துச் செல்லப்பட்டது.

இது சம்பந்தமாக அந்த குடோனின் உரிமையாளரையும் அதை வாடகைக்கு எடுத்து நடத்திய நபரையும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தேடி வருகின்றனர்.

சென்னை வடபெரும்பாக்கம் ஜெயா நகரில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மூத்த அலுவலர் கருணாகரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் அங்கு பலத்த சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. ஐந்து கோடி மதிப்புள்ள சுமார் 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செம்மரக்கட்டைகள், சுங்கவரி இலாகாவில் ஒப்படைக்க எடுத்துச் செல்லப்பட்டது.

இது சம்பந்தமாக அந்த குடோனின் உரிமையாளரையும் அதை வாடகைக்கு எடுத்து நடத்திய நபரையும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தேடி வருகின்றனர்.

இதையும் படியுங்க:

செம்மரக்கட்டையுடன் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

Intro:புழல் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 5கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்Body:புழல் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 5கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்.

சென்னை புழல் அடுத்த வடபெரும்பாக்கம் ஜெயா நகரில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு துறை மூத்த அதிகாரி கருணாகரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் ஜெயா நகர் பகுதியில் பலத்த சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் ஒரு குடோனில் செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் உடனே கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் அதனுள் செம்மரக்கட்டைகள் பதுக்கிவைக்கப்ட்டிருந்தது தெரியவந்தது. அதன் எடை சுமார் 10 டன் இருக்கும ் எனவும் அதன் மதிப்பு ரூபாய் 5 கோடி என தெரியவந்தது.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செம்மரக்கட்டைகளை சுங்கவரி இலாகாவில் ஒப்படைக்க அவர்கள் எடுத்து சென்றனர்.

இது சம்பந்தமாக அந்த குடோனின் உரிமையாளரையும் அதை வாடகைக்கு எடுத்து நடத்திய நபரையும் தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.