ETV Bharat / state

விளம்பரப்பலகை விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் அருகே விளம்பரப்பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப்பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

author img

By

Published : Aug 8, 2022, 5:27 PM IST

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியுதவி
விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியுதவி

சென்னை: பெருங்களத்தூரிலிருந்து கோயம்பேடு நோக்கி நேற்று சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று, G.S.T. சாலையில் ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாகச்செல்லும்போது, சாலையின் அருகில் இருந்த விளம்பரப்பலகையில் பலமாக மோதியது.

அப்பலகை சாலையில் சாய்ந்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பி.சண்முக சுந்தரம் (வயது 28) என்பவர் பலத்த காயமுற்று, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

அதோடு, போக்குவரத்துக் கழக நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும், என மொத்தம் மூன்று லட்சம் ரூபாயினை நிவாரணமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்த நிதியினை நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்.

இதையும் படிங்க: அதிவேகமாக மாநகரப்பேருந்தை இயக்கியதால் விபத்து: ஓட்டுநர், நடத்துநர் காவல் நிலையத்தில் சரண்

சென்னை: பெருங்களத்தூரிலிருந்து கோயம்பேடு நோக்கி நேற்று சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று, G.S.T. சாலையில் ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாகச்செல்லும்போது, சாலையின் அருகில் இருந்த விளம்பரப்பலகையில் பலமாக மோதியது.

அப்பலகை சாலையில் சாய்ந்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பி.சண்முக சுந்தரம் (வயது 28) என்பவர் பலத்த காயமுற்று, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

அதோடு, போக்குவரத்துக் கழக நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும், என மொத்தம் மூன்று லட்சம் ரூபாயினை நிவாரணமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்த நிதியினை நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்.

இதையும் படிங்க: அதிவேகமாக மாநகரப்பேருந்தை இயக்கியதால் விபத்து: ஓட்டுநர், நடத்துநர் காவல் நிலையத்தில் சரண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.