ETV Bharat / state

ஊரடங்கால்  உணவின்றி தவித்தவர்களுக்கு உதவிய எம்.பி. வசந்தகுமார்! - MP Vasanthakumar help the Tribal people

கன்னியாகுமரி: கரோனா வைரஸ் தொற்று தாக்கத்தினால் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவினால் உணவின்றி தவித்த மலைவாழ் கிராம மக்களுக்கு மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் சார்பாக நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

21 நாள் ஊரடங்கு உத்தரவு: உணவின்றி தவித்த மக்களுக்கு உதவிய எம்.பி.!
21 நாள் ஊரடங்கு உத்தரவு: உணவின்றி தவித்த மக்களுக்கு உதவிய எம்.பி.!
author img

By

Published : Apr 4, 2020, 7:14 AM IST

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது பல நாடுகளை ஆட்க்கொண்டுவருகிறது. இதனால் இந்தியாவிலும் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறைப் பகுதியில் உள்ள கிராம, மலைவாழ் மக்கள் உணவு பொருள்கள் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டு தவித்து வந்தனர். இதுபற்றி தகவலறிந்த மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தனது சொந்த செலவில் சமைப்பதற்குத் தேவையான மளிகை பொருள்கள் காய்கறி வகைகளை கீரிப்பாறை மலை வாழ் மக்கள் வாழ்ந்து வரும் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்க ஏற்பாடு செய்தார்.

21 நாள் ஊரடங்கு உத்தரவு: உணவின்றி தவித்த மக்களுக்கு உதவிய எம்.பி.!

அதன்படி கீரிப்பாறைப் பகுதியை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நிவாரண பொருள்களை வீடு வீடாகக் கொண்டு சென்று வழங்கினர். நிவாரண பொருள்கள் வழங்கிய மக்களவை உறுப்பினர் வசந்தகுமாருக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க...கரோனா தொகுப்பு: தள்ளாடும் எஸ்.பி.ஐ.!

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது பல நாடுகளை ஆட்க்கொண்டுவருகிறது. இதனால் இந்தியாவிலும் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறைப் பகுதியில் உள்ள கிராம, மலைவாழ் மக்கள் உணவு பொருள்கள் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டு தவித்து வந்தனர். இதுபற்றி தகவலறிந்த மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தனது சொந்த செலவில் சமைப்பதற்குத் தேவையான மளிகை பொருள்கள் காய்கறி வகைகளை கீரிப்பாறை மலை வாழ் மக்கள் வாழ்ந்து வரும் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்க ஏற்பாடு செய்தார்.

21 நாள் ஊரடங்கு உத்தரவு: உணவின்றி தவித்த மக்களுக்கு உதவிய எம்.பி.!

அதன்படி கீரிப்பாறைப் பகுதியை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நிவாரண பொருள்களை வீடு வீடாகக் கொண்டு சென்று வழங்கினர். நிவாரண பொருள்கள் வழங்கிய மக்களவை உறுப்பினர் வசந்தகுமாருக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க...கரோனா தொகுப்பு: தள்ளாடும் எஸ்.பி.ஐ.!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.