ETV Bharat / state

கரோனா பரிசோதனை செய்தாலே 14 நாள்கள் தனிமை - சென்னை மாநகராட்சி

author img

By

Published : Jun 11, 2020, 9:28 PM IST

சென்னை: கரோனா பரிசோதனை மேற்கொண்டாலே அந்த நபர், அவரது குடும்பத்தினருடன் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

chennai
chennai

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று (ஜூன் 11) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் பிரதிநிதிகளிடம் கூறியதாவது,

  • இனிவரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
  • சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற 12 அரசு பரிசோதனை மையங்களும் 18 தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன.
  • இங்கு பரிசோதனை மேற்கொள்பவரின் பெயர், முகவரி, வயது, பாலினம், தொலைபேசி எண், தொழில் விவரம், குடும்பத்தினரின் தகவல்களை உடனடியாக மாநகராட்சி அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பரிசோதனை கூடங்கள் பின்பற்ற வேண்டும்.
  • பரிசோதனைக் கூடங்களில் ஐசிஎம்ஆர் வழிமுறைகளை பின்பற்றி அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • பரிசோதனை மையங்களில் வாயில்களில் ஐ சி எம் ஆர் வழிமுறைகளை பின்பற்றி பேனர் வைக்க வேண்டும்.
  • வீடுகளுக்குச் சென்று கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: இரட்டிப்பான பிரசவங்கள்... குழந்தைகள் வாசனையால் நிரம்பிய அரியலூர் மருத்துவமனை!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று (ஜூன் 11) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் பிரதிநிதிகளிடம் கூறியதாவது,

  • இனிவரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
  • சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற 12 அரசு பரிசோதனை மையங்களும் 18 தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன.
  • இங்கு பரிசோதனை மேற்கொள்பவரின் பெயர், முகவரி, வயது, பாலினம், தொலைபேசி எண், தொழில் விவரம், குடும்பத்தினரின் தகவல்களை உடனடியாக மாநகராட்சி அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பரிசோதனை கூடங்கள் பின்பற்ற வேண்டும்.
  • பரிசோதனைக் கூடங்களில் ஐசிஎம்ஆர் வழிமுறைகளை பின்பற்றி அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • பரிசோதனை மையங்களில் வாயில்களில் ஐ சி எம் ஆர் வழிமுறைகளை பின்பற்றி பேனர் வைக்க வேண்டும்.
  • வீடுகளுக்குச் சென்று கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: இரட்டிப்பான பிரசவங்கள்... குழந்தைகள் வாசனையால் நிரம்பிய அரியலூர் மருத்துவமனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.