ETV Bharat / state

சென்னையில் 12 டன் நெகிழி பறிமுதல்!

author img

By

Published : Dec 11, 2019, 5:28 PM IST

சென்னை: திருவொற்றியூர், மணலி பகுதிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 12 டன் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

12 ton plastic seized
12 ton plastic seized

ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. நெகிழிப் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்கள் குறித்தும் நெகிழிப் பொருள்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சென்னை மாநகராட்சியால் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலும், தடையை மீறி நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவோரை கண்டறிய பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட திருவொற்றியூர், மணலி ஆகிய மண்டலங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், சாலையோரக் கடைகள், உணவங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இன்று திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

மண்டல அலுவலர்கள் மூலம் மூன்று குழுக்களாக நடத்திய இந்த ஆய்வில், திருவொற்றியூர் பகுதியில் இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 6.4 டன் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபேல மணலி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 6.1 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

12 ton plastic seized
உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள்

பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் மாநகராட்சி அலுவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: குரூப் 1 நேர்முகத் தேர்வில் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை

ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. நெகிழிப் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்கள் குறித்தும் நெகிழிப் பொருள்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சென்னை மாநகராட்சியால் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலும், தடையை மீறி நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவோரை கண்டறிய பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட திருவொற்றியூர், மணலி ஆகிய மண்டலங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், சாலையோரக் கடைகள், உணவங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இன்று திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

மண்டல அலுவலர்கள் மூலம் மூன்று குழுக்களாக நடத்திய இந்த ஆய்வில், திருவொற்றியூர் பகுதியில் இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 6.4 டன் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபேல மணலி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 6.1 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

12 ton plastic seized
உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள்

பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் மாநகராட்சி அலுவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: குரூப் 1 நேர்முகத் தேர்வில் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 11.12.19

திருவெற்றியூர் மற்றும் மணலி பகுதிகளில் மாநகராடையால் திடீர் ஆய்வுகள் 13,563 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 2,32,400 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, 6.4 டன் தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல்..

தமிழக அரசால் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ( நெகிழிகள்) தடை செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் பயன்பாடு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பதிப்புகள் குறித்து சென்னை மாநகராட்சியால் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் தொடர்பாக பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் நடந்துவருகிறது.

இன்று சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட திருவெற்றியூர் மற்றும் மனலி ஆகிய மண்டலங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் திடீர் ஆய்வுகள் மண்டல அதிகாரிகளின் மூலம் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டதில் 1 முதல் 14 வது வார்டுகளில் 13,563 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 2,32,400 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, 6.4 டன் தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும். மணலி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 6.1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2,11,400 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.. மொத்தமாக 4,43,800 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்டது என மாநகராட்சியால் தெரிவிக்கப்பட்டுள்ளது..

tn_che_03_banned_plastics_seized_by_corporation_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.