ETV Bharat / state

28 நாட்களில் வாகனத்தணிக்கைகளின் மூலம் ரூ.12.19 கோடி வசூல் - வணிக வரித்துறை தகவல்!

author img

By

Published : Jun 29, 2022, 9:40 PM IST

28 நாட்களில் வாகனத் தணிக்கைகளின் மூலம் வரி அல்லது தண்டத்தொகையாக ரூ.12.19 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

28 நாட்களில் வாகனத் தணிக்கைகளின் மூலம் ரூ.12.19 கோடி வசூல் -  வணிகவரித்துறை தகவல்!
28 நாட்களில் வாகனத் தணிக்கைகளின் மூலம் ரூ.12.19 கோடி வசூல் - வணிகவரித்துறை தகவல்!

சென்னை: இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்துவதில், வணிக வரித்துறை மூலம் பெறப்படும் வரி வருவாயானது பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறு அரசுக்கு சேர வேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும் விதத்தில், இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் உத்திரவிற்கிணங்க, வணிக வரித்துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவது, ரோந்துப் பணிக் குழுக்களைக் கொண்டு பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களைத் தணிக்கை செய்யும் பணியினை திறம்பட செய்வது போன்ற பல புதிய முயற்சிகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி 09.05.2022 முதல் 05.06.2022 வரை முடிவடைந்த நான்கு வார காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகவரி நுண்ணறிவுப்பிரிவு அலுவலகங்கள் மூலமாக 46,247 வாகனத்தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 55,982 மின்னணு வழிப்பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு 1,273 இனங்களில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் வரி அல்லது தண்டத்தொகையாக ரூ.12.19 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் எவ்வித ஏய்ப்புகளும் இன்றி வசூல் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் இத்தகைய தணிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியருக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் மாணவிகள்!

சென்னை: இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்துவதில், வணிக வரித்துறை மூலம் பெறப்படும் வரி வருவாயானது பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறு அரசுக்கு சேர வேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும் விதத்தில், இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் உத்திரவிற்கிணங்க, வணிக வரித்துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவது, ரோந்துப் பணிக் குழுக்களைக் கொண்டு பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களைத் தணிக்கை செய்யும் பணியினை திறம்பட செய்வது போன்ற பல புதிய முயற்சிகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி 09.05.2022 முதல் 05.06.2022 வரை முடிவடைந்த நான்கு வார காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகவரி நுண்ணறிவுப்பிரிவு அலுவலகங்கள் மூலமாக 46,247 வாகனத்தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 55,982 மின்னணு வழிப்பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு 1,273 இனங்களில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் வரி அல்லது தண்டத்தொகையாக ரூ.12.19 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் எவ்வித ஏய்ப்புகளும் இன்றி வசூல் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் இத்தகைய தணிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியருக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் மாணவிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.