ETV Bharat / state

நாளை வெளியாகிறது 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

author img

By

Published : May 7, 2019, 8:08 PM IST

சென்னை: பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை அரசு தேர்வுகள் துறை இயக்ககத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வெளியாகிறது 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

பதினொராம் வகுப்பு பொதுத்தேர்வுகள், மார்ச் மாதம் 6ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடந்தது. இத்தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 278 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ மாணவிகள் மற்றும் 5 ஆயிரத்து 32 தனித் தேர்வர்களும் எழுதினர்.

இதற்கான தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணியளவில் அரசு தேர்வுகள் துறை இயக்கத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலமும் தெரியப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பதினொராம் வகுப்பு பொதுத்தேர்வுகள், மார்ச் மாதம் 6ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடந்தது. இத்தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 278 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ மாணவிகள் மற்றும் 5 ஆயிரத்து 32 தனித் தேர்வர்களும் எழுதினர்.

இதற்கான தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணியளவில் அரசு தேர்வுகள் துறை இயக்கத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலமும் தெரியப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 11  ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 
நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடு
சென்னை, 


11 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 6 ந் தேதி முதல் 22 ந் தேதி வரையில் நடைபெற்றது. இந்த தேர்வினை 7,278 பள்ளிகளில் இருந்து 2,914 மையங்களில் பதிவு செய்த 8,16,618 மாணவர்களும், 5 ஆயிரத்து 32 தனித் தேர்வர்களும் தேர்வினை எழுதினர். 
11ம் வகுப்பு  பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் நேரடித் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள்  8. 5.2019  அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள்
தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு
முடிவுகளை மதிப்பெண்களுடன்    www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in,www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துக் கொள்ளலாம். 


மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்
இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை
அறியது கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியது கொள்ளலாம்.



பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த
உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம்  தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது
வழங்கிய செல்போன் எண்ணிற்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்.மூலம்
அனுப்பப்படும்.
 
அரசுத் தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்  வழங்கப்படும் வரை மட்டுமே இம்மதிப்பெண் பட்டியல் செல்லும். 145.2019  பிற்பகல் முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த பள்ளி, தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக தங்களது
மதிப்பெண் பட்டியலை  பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் 16.5.2019  மதியம்  முதல் பள்ளி மாணவர்கள் , தனித்தேர்வர்கள் தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தங்களது பிறயத தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து  என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மதிப்பெண் பட்டியலில்,   பள்ளி மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின்
தலைமையாசிரியரும், தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுதிய தேர்வு மையத்தின் பள்ளித்
தலைமையாசிரியரும் சான்றொப்பமிட்டிருயதால் மட்டுமே மதிப்பெண் பட்டியல் செல்லும் என அதில் கூறியுள்ளார். 
 



 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.