ETV Bharat / state

தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு!

author img

By

Published : Nov 30, 2019, 7:15 PM IST

சென்னை: தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த பொறியாளரின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடியே 10 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இழப்பீடு வழங்க உத்தரவு
இழப்பீடு வழங்க உத்தரவு

2012ஆம் ஆண்டு, சென்னை சர்தார் பட்டேல் சாலையில் பைக்கில் சென்ற ராஜேஷ் மீது, பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேஷ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பிற்கு ரூ. 2 கோடி இழப்பீடு வழங்கக் கோரி அவரது பெற்றோர், மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி உமா மகேஸ்வரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரணையின் இறுதியில், விபத்து எற்பட்ட போது ராஜேஷ் மாதம் 71 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தார். இதனடிப்படையில், ஒரு கோடியே 10 லட்சத்து 35 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை வழக்கு தொடர்ந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 7.5 சதவீத வட்டியுடன் சேர்ந்து அவரது பெற்றோரின் வங்கி கணக்குகளில் இரண்டு மாதங்களுக்குள் டெபாசிட் செய்ய நியூ இந்திய அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

2012ஆம் ஆண்டு, சென்னை சர்தார் பட்டேல் சாலையில் பைக்கில் சென்ற ராஜேஷ் மீது, பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேஷ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பிற்கு ரூ. 2 கோடி இழப்பீடு வழங்கக் கோரி அவரது பெற்றோர், மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி உமா மகேஸ்வரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரணையின் இறுதியில், விபத்து எற்பட்ட போது ராஜேஷ் மாதம் 71 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தார். இதனடிப்படையில், ஒரு கோடியே 10 லட்சத்து 35 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை வழக்கு தொடர்ந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 7.5 சதவீத வட்டியுடன் சேர்ந்து அவரது பெற்றோரின் வங்கி கணக்குகளில் இரண்டு மாதங்களுக்குள் டெபாசிட் செய்ய நியூ இந்திய அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: போதையில் போலீஸாருடன் தகராறு செய்த குடிமகன்...

Intro:Body:தண்ணீர் லாரி மோதி பலியான இளம் வயது பொறியாளரின் குடும்பத்திற்கு 1 கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சர்தார் பட்டேல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜேஷ் என்ற பொறியாளரின் பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

கடந்த 2012 அக்டோபர் மாதம் நடத்த இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேஷ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரது பெற்றோர், மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி உமா மகேஸ்வரி, பலியான போது ராஜேஷ், மாதம் 71 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தார். அந்த அடிப்படையில் ஒரு கோடியே 10 லட்சத்து 35 ஆயிரத்து 700 ரூபாயை வழக்கு தொடர்ந்த 2014 ம் ஆண்டு முதல் 7.5 சதவீத வட்டியுடன் 2 மாதத்தில் அவரது பெற்றோரின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்ய நியூ இந்திய அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.