ETV Bharat / state

செங்கல்பட்டில் 13 பேர் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமா? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

author img

By

Published : May 5, 2021, 4:14 PM IST

செங்கல்பட்டில்: 13 பேர் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை என, மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

செங்கல்பட்டில் 13 பேர் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?
செங்கல்பட்டில் 13 பேர் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?

செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில், 13 பேர் ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல்கள் பரவின. இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் கிலோ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

செங்கல்பட்டில் 13 பேர் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?

மூன்று நாளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பு இருந்து கொண்டே இருக்கிறது. தினமும் 6 ஆயிரம் கிலோ நிரப்பப்பட்டு வருகிறது. நேற்று (மே.4) இரவு 200 படுக்கைக் கொண்ட வார்டில் 176 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. அந்த வார்டில் 40 வயதிற்கு உட்பட்டோர் 5 நபர், 80 வயதுக்கு மேற்பட்டோர் 2 பேர், 8 ஆண்கள், 5 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் இறந்தனர். இறந்த 13 பேரில், 12 பேர் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே 13 பேர் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை" என்றார்.

இதையும் படிங்க: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் செங்கல்பட்டில் 11 பேர் உயிரிழந்த பரிதாபம்

செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில், 13 பேர் ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல்கள் பரவின. இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் கிலோ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

செங்கல்பட்டில் 13 பேர் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?

மூன்று நாளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பு இருந்து கொண்டே இருக்கிறது. தினமும் 6 ஆயிரம் கிலோ நிரப்பப்பட்டு வருகிறது. நேற்று (மே.4) இரவு 200 படுக்கைக் கொண்ட வார்டில் 176 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. அந்த வார்டில் 40 வயதிற்கு உட்பட்டோர் 5 நபர், 80 வயதுக்கு மேற்பட்டோர் 2 பேர், 8 ஆண்கள், 5 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் இறந்தனர். இறந்த 13 பேரில், 12 பேர் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே 13 பேர் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை" என்றார்.

இதையும் படிங்க: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் செங்கல்பட்டில் 11 பேர் உயிரிழந்த பரிதாபம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.