ETV Bharat / state

குடிபோதையில் விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி செய்த காவலருக்கு பாராட்டு!

கூடுவாஞ்சேரியில் குடிபோதையில் தடுமாறி விழுந்து காயமடைந்த நபருக்கு காவல் ஆய்வாளர் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

author img

By

Published : Dec 24, 2020, 3:53 PM IST

குடிபோதையில் இருந்த நபருக்கு  உதவிய காவலர்
குடிபோதையில் இருந்த நபருக்கு உதவிய காவலர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் நேற்று (டிச.24) இரவு நபர் ஒருவர் குடிப்போதையில் நடந்துசென்று கொண்டிருக்கையில் தடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் அசோகன், அந்நபருக்கு முதலுதவி செய்து உதவினார். இதுதொடர்பாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அந்நபர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

குடிபோதையில் இருந்த நபருக்கு காவலர் அசோகன் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அவரது செயலை அப்பகுதி மக்களும், நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர்.

குடிபோதையில் இருந்த நபருக்கு உதவிய காவலர்

இதையும் படிங்க: புதுச்சேரியில் அலங்காரப் பொருள்கள் விற்பனை மந்தம்!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் நேற்று (டிச.24) இரவு நபர் ஒருவர் குடிப்போதையில் நடந்துசென்று கொண்டிருக்கையில் தடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் அசோகன், அந்நபருக்கு முதலுதவி செய்து உதவினார். இதுதொடர்பாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அந்நபர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

குடிபோதையில் இருந்த நபருக்கு காவலர் அசோகன் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அவரது செயலை அப்பகுதி மக்களும், நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர்.

குடிபோதையில் இருந்த நபருக்கு உதவிய காவலர்

இதையும் படிங்க: புதுச்சேரியில் அலங்காரப் பொருள்கள் விற்பனை மந்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.