ETV Bharat / state

‘மத்திய அரசு மீது வழக்கு தொடுக்கத் தயார்’ - சி.வி. சண்முகம் காட்டம்!

author img

By

Published : Jul 17, 2019, 3:22 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்காததால், வழக்கு தொடர தயாராக இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மீது வழக்கு தொடுக்க தயார் -சி.வி. சண்முகம் காட்டம்!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரி 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களை குடியரசு தலைவர் நிராகரித்து, அப்போதே அனுப்பியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உயர்நீதிமன்றத்தில் அளித்த பதில் குறித்து அரசின் கவனத்தை பெற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.

அதில் 2017ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மசோதாக்களை நிராகரித்துவிட்டு 21 மாதங்கள் கடந்த போதிலும், எந்த அழுத்தத்தையும் தமிழ்நாடு அரசு கொடுக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும், மீண்டும் அதே இரண்டு மசோதாக்களை இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என்றும் அதற்கு தமிழக அரசு தயாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், நீட் மசோதாக்களை குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பதாக செப்டம்பர் 22, 2017 அன்று தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. ஆனால் அதில் நிராகரிக்கப்பட்டது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. மேலும், நிறுத்திவைக்கப்பட்டதற்கான காரணம் கேட்டு பதில் கடிதம் அனுப்பியும், எந்த விளக்கத்தையும் மத்திய அரசு அளிக்கவில்லை. மத்திய அரசு அனுப்பிய கடிதத்திற்கு விளக்கம் கேட்டு இதுவரை 12 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளோம் என தெரிவித்தார்.

இது குறித்து மத்திய அரசு காரணத்தை தெரிவிக்கவில்லை என்றால், மீண்டும் மசோதா நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப தயாராக உள்ளோம் என்றும் இதற்கும் மத்திய அரசு பதில் அளிக்காவிட்டால் வழக்கு தொடர அரசுக்கு பயமில்லை எனவும் தெரிவித்தார்.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரி 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களை குடியரசு தலைவர் நிராகரித்து, அப்போதே அனுப்பியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உயர்நீதிமன்றத்தில் அளித்த பதில் குறித்து அரசின் கவனத்தை பெற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.

அதில் 2017ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மசோதாக்களை நிராகரித்துவிட்டு 21 மாதங்கள் கடந்த போதிலும், எந்த அழுத்தத்தையும் தமிழ்நாடு அரசு கொடுக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும், மீண்டும் அதே இரண்டு மசோதாக்களை இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என்றும் அதற்கு தமிழக அரசு தயாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், நீட் மசோதாக்களை குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பதாக செப்டம்பர் 22, 2017 அன்று தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. ஆனால் அதில் நிராகரிக்கப்பட்டது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. மேலும், நிறுத்திவைக்கப்பட்டதற்கான காரணம் கேட்டு பதில் கடிதம் அனுப்பியும், எந்த விளக்கத்தையும் மத்திய அரசு அளிக்கவில்லை. மத்திய அரசு அனுப்பிய கடிதத்திற்கு விளக்கம் கேட்டு இதுவரை 12 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளோம் என தெரிவித்தார்.

இது குறித்து மத்திய அரசு காரணத்தை தெரிவிக்கவில்லை என்றால், மீண்டும் மசோதா நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப தயாராக உள்ளோம் என்றும் இதற்கும் மத்திய அரசு பதில் அளிக்காவிட்டால் வழக்கு தொடர அரசுக்கு பயமில்லை எனவும் தெரிவித்தார்.

Intro:Body:*சட்டமன்றம் - நீட் மசோதாக்கள் - காரசார விவாதம்*

12 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்காததால், வழக்கு தொடர தயாராக இருப்பதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி 2017ல் தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களை குடியரசு தலைவர் நிராகரித்து அப்போதே அனுப்பியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உயர்நீதிமன்றத்தில் அளித்த பதில் குறித்து அரசின் கவனத்தை பெற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். 2017லேயே குடியரசு தலைவர் மசோதாக்களை நிராகரித்துவிட்டு 21 மாதங்கள் கடந்த போதிலும், எந்த அழுத்ததையும் தமிழக அரசு கொடுக்கவில்லை என தெரிவித்தார். மேலும் நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும் மீண்டும் அதே 2 மசோதாக்களை இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என்றும் அதற்கு தமிழக அரசு தயாரா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர், நீட் மசோதாக்களை குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பதாக செப்டம்பர் 22, 2017 அன்று தமிழக அரசிற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. ஆனால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று எந்த தகவலும் அதில் இடம்பெறவில்லை. மேலும் நிறுத்திவைக்கப்பட்டதற்கான காரணம் கேட்டு பதில் கடிதம் அனுப்பியும் எந்த விளக்கத்தையும் மத்திய அரசு அளிக்கவில்லை என்றார். மத்திய அரசு அனுப்பிய கடித்ததிற்கு விளக்கம் கேட்டு இதுவரை 12 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளோம். மத்திய அரசு காரணத்தை தெரிவிக்கவில்லை. மீண்டும் மசோதா நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப தயாராக உள்ளோம். இதற்கும் மத்திய அரசு பதில் அளிக்க விட்டால் வழக்கு தொடர அரசுக்கு பயமில்லை என தெரிவித்தார்.

இவ்விவாதத்தில் பேசிய முதலமைச்சர், ஒவ்வொரு முறையும் டெல்லிக்கு செல்லும் போது பிரதமரை சந்தித்து நேரிலும் மனுவிலும் நீட் தொடர்பாக அழுத்தம் கொடுக்கப்பட்டது. மேலும் நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் எந்த பதிலையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. எதிர்கட்சி தலைவர் மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசிடம் இருந்து பதில் கிடைத்த பின் சிறப்பு சட்டபேரவை கூட்டத்தை கூட்டியாவது மசோதாக்களை நிறைவேற்றி அனுப்புவோம் என தெரிவித்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.