ETV Bharat / state

சட்டப்படிப்பு படிக்கும்போதே மாணவர்களுக்கு முழு பயிற்சி - அம்பேத்கர் பல்கலை.

author img

By

Published : Apr 12, 2019, 10:08 AM IST

சென்னை: சட்டப்படிப்புக்கு தொழிற்கல்வி அங்கீகாரம் கிடைத்துள்ளதால் மாணவர்கள் மருத்துவக் கல்வியை போன்று முழு பயிற்சி அளித்து அனுப்பப்படுவார்கள் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் சூரிய நாராயண சாஸ்திரி தெரிவித்தார்.

Law professional course introduced for student - VC

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'சட்டப் படிப்பை தமிழ்நாடு அரசு தொழில் கல்வியாக மாற்றம் செய்து அறிவித்துள்ளது. இதனால் மருத்துவக்கல்வி, பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது போல் முழுமையாக பயிற்சி அளிக்க வேண்டும்.

சட்டப் படிப்பிற்கான மதிப்பும் அதிகரித்துள்ளது. அகில இந்திய பார் கவுன்சில் சிறந்த வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டுமென கூறியுள்ளது. அந்த விதியின் அடிப்படையிலும், சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காகவும் சென்னை தரமணியில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளி வளாகத்தில் ரூ.15 கோடி செலவில் சட்ட பயிற்சி ஆய்வகம் அமைத்துள்ளோம்.

மேலும் சட்ட மாணவர்களுக்கு மக்களுடன் பழகுவது எப்படி? சட்ட ஆவணங்களை எழுதுவது எப்படி? நீதிமன்றத்தில் வாதங்களை எடுத்து வைப்பது எப்படி? போன்றவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சிலரும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர் என்று துணை வேந்தர் சூரிய நாராயண சாஸ்திரி தெரிவித்தார்.

சூரிய நாராயண சாஸ்திரி

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'சட்டப் படிப்பை தமிழ்நாடு அரசு தொழில் கல்வியாக மாற்றம் செய்து அறிவித்துள்ளது. இதனால் மருத்துவக்கல்வி, பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது போல் முழுமையாக பயிற்சி அளிக்க வேண்டும்.

சட்டப் படிப்பிற்கான மதிப்பும் அதிகரித்துள்ளது. அகில இந்திய பார் கவுன்சில் சிறந்த வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டுமென கூறியுள்ளது. அந்த விதியின் அடிப்படையிலும், சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காகவும் சென்னை தரமணியில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளி வளாகத்தில் ரூ.15 கோடி செலவில் சட்ட பயிற்சி ஆய்வகம் அமைத்துள்ளோம்.

மேலும் சட்ட மாணவர்களுக்கு மக்களுடன் பழகுவது எப்படி? சட்ட ஆவணங்களை எழுதுவது எப்படி? நீதிமன்றத்தில் வாதங்களை எடுத்து வைப்பது எப்படி? போன்றவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சிலரும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர் என்று துணை வேந்தர் சூரிய நாராயண சாஸ்திரி தெரிவித்தார்.

சூரிய நாராயண சாஸ்திரி
Intro:சட்டப்படிப்பு தொழிற்கல்வி அங்கீகாரம் படிக்கும்போதே மாணவர்களுக்கு முழு பயிற்சி
துணைவேந்தர் சூரிய நாராயண சாஸ்திரி தகவல்


Body:சென்னை, சட்டப் படிப்புக்கு தொழிற்கல்வி அங்கீகாரம் கிடைத்துள்ளதால் மாணவர்கள் மருத்துவ கல்வியை போன்று முழு பயிற்சி அளித்து அனுப்பப்படுவார்கள் என துணைவேந்தர் சூரிய நாராயண சாஸ்திரி தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரிய நாராயண சாஸ்திரி, சட்ட படிப்பினை தமிழக அரசு தொழில் கல்வியாக மாற்றம் செய்து அறிவித்துள்ளது. இதனால் மருத்துவக்கல்வி, பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது போல் முழுமையாக பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் சட்டப் படிப்பிற்கான மதிப்பும் அதிகரித்துள்ளது.
அகில இந்திய பார் கவுன்சில் சிறந்த வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டுமென கூறியுள்ளது. அந்த விதியின் அடிப்படையிலும், சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காகவும் சென்னை தரமணியில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளி வளாகத்தில் ரூ 15 கோடி செலவில் சட்ட பயிற்சி ஆய்வகம் அமைத்துள்ளோம்.
மேலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மூட் கோர்ட் தீவிரமாக நடத்தப்படுகிறது. இந்தியாவில் நடைபெற்ற 32 மூட் கோர்ட் போட்டிகளில் 18 போட்டிகளில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சார்க் மூட் கோர்ட்டில் வெற்றி பெற்றுள்ளனர் சிங்கப்பூரில் நடைபெற்ற மூட் கோர்ட் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

சட்டப் படிப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை பார்த்து பார் கவுன்சில் பாராட்டி உள்ளதுடன், சட்டம் படிக்கும் பெண் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கவும் உதவுவதாக கூறி உள்ளனர். மேலும் சட்ட மாணவர்களுக்கு மக்களுடன் பழகுவது எப்படி?, சட்ட ஆவணங்களை எழுதுவது எப்படி?, நீதிமன்றத்தில் வாதங்களை எடுத்து வைப்பது எப்படி ? போன்றவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சிலரும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர். இது போன்ற பயிற்சிகள் அளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு கட்டாயம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளுக்கும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் 25க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் இருந்து பேராசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகளும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆர்வமாக வருகின்றனர்.
மேலும் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் பயிற்சி அளிக்க வர உள்ளதால் காலை 8 மணி 30 நிமிடத்திற்கு கல்லூரியை தொடங்குவதா அல்லது சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இதனால் சட்டம் பயிலும் மாணவர்கள் படிப்பினை முடித்த விட்டு வெளியே சென்றவுடன் அவர்கள் வழக்கறிஞர் பணியை தொடங்க முடியும்.

சட்ட படிப்பினை தொழில் கல்வியாக மாற்றியதால் இதில் மாணவர்கள் சேர்வதற்கான தேவை அதிகரித்து விடும். முன்பு போல் வேறு படிப்பில் இடம் கிடைக்காதவர்கள் சட்டப்படிப்பில் சேரலாம் என்ற நிலை மாற்றப்படும்.
தற்பொழுது தொழிற்கல்வியாக மாற்றி உள்ளதால் panasonic அவர்கள் முழுமையாக பயிற்சி பெற்று படித்து முடித்து வெளியில் சென்றவுடன் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்ற முடியும். மேலும் சட்ட மாணவர்கள் படிக்கும் பொழுதே நீதிபதியிடம் பயிற்சியும் பெற முடியும். இதுபோன்ற நடவடிக்கையால் சட்டக் கல்விக்கு தொழில் கல்வி அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரிக்கும் என தெரிவித்தார்.












Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.